Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

‘அறிவியல் முடிவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு’ - குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் அரசு!

அவசர அனுமதிக்கு விண்ணப்பித்திருக்கும் இரண்டாவது நிறுவனம்!

‘அறிவியல் முடிவுகளின் அடிப்படையில் இறுதி முடிவு’ - குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் அரசு!

Monday October 18, 2021 , 2 min Read

கிட்டத்தட்ட 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை (இரண்டு டோஸ்களும்) செலுத்திய நாடு என்ற பெருமையை இன்னும் சில நாட்களில் பெற இருக்கிறது இந்தியா.


தற்போது வரை 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தி வரும் இந்தியா, அடுத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தத் தீர்மானித்துள்ளதாக கடந்த சில வாரங்களாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் மத்திய அரசு இவ்விவகாரத்தில் எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து பேசியிருக்கிறது.


கோவிட் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் வி கே பால் இது தொடர்பாக பேசுகையில்,

"அறிவியல் ஆலோசனைகள் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும். நோய்த்தொற்றுகள் குறைந்து வந்தாலும், இரண்டாவது அலை குறையும் என்றாலும், மோசமான காலம் முடிந்துவிட்டது என்று சொல்வது இப்போது நியாயமாக இருக்காது. ஏனென்றால் பல நாடுகள் இரண்டு அலைகளுக்கு பிறகு கொரோனா பாதிப்புகளை எதிர்கொண்டன," என்றுள்ளார்.

தற்போது, ​​கோவிஷீல்ட், கோவாக்ஸின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அவை அனைத்தும் இரண்டு டோஸ் தடுப்பூசிகள்.


Zydus Cadila என்ற நிறுவனம் மூலமாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஊசி இல்லாத ZyCoV கோவிட் -19 தடுப்பு மருந்து 12-18 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் முதல் தடுப்பூசியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த நிறுவனம் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

தடுப்பூசி

இதுதொடர்பாக பேசியுள்ள வி கே பால்,

“பல நாடுகள் இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது எங்களுக்குத் தெரியும். ஒட்டுமொத்த அறிவியல் முடிவுகள் மற்றும் குழந்தை உரிமம் பெற்ற தடுப்பூசிகளின் விநியோக நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம்," என்றுள்ளார்.

இந்தியாவின் மத்திய மருந்து ஆணையத்தின் நிபுணர் குழு, பாரத் பயோடெக்கின் கோவாக்ஸினுக்கு 2-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு சில நிபந்தனைகளுடன் EUA வழங்க பரிந்துரைத்துள்ளது.


இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) ஒப்புதல் அளித்தால், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயன்படுத்த EUAஐப் பெறும் ZyCoV-D க்குப் பிறகு இரண்டாவது தடுப்பூசி இதுவாகும். நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI), ZyCov-D யை எப்படி மிகவும் உகந்த பயன்பாட்டிற்கு நிலைநிறுத்த வேண்டும் என்று பார்க்கிறது.


வி கே பாலின் கூற்றுப்படி,

”கோவாக்சின் வயது வந்தோருக்கான தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாகும், தடுப்பூசியை எவ்வாறு வழங்குவது, தடுப்பூசித் திட்டத்தின் தேவைகளின் மொத்தத்தையும் ஆராய வேண்டும். சப்ளை மற்றும் சாத்தியமான தகுதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் (குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது) ஒரு நடைமுறை முடிவை எடுக்க முடியும்,” என்று தெரிகிறது.

என்றாலும், குழந்தைகளுக்கான கோவிட் தடுப்பூசி எப்போது தொடங்கும் என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை இப்போது கொடுக்க இயலாது. தடுப்பூசி திட்டத்தில் ஜைடஸ் காடிலாவின் தடுப்பூசியை இணைப்பதற்கான தயாரிப்பு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது," என்று பேசியுள்ளார்.


தகவல்: பிடிஐ | தொகுப்பு: மலையரசு