2020ல் பெண்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை: கருத்துக் கணிப்பில் தகவல்!
2020ல் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பெரும்பாலோர் கூறியதோடு, 45% பேர், 2019ல் இது மேம்படவில்லை எனக் கூறியுள்ளனர்.
நகர்புற இந்தியர்களில் 29 சதவீதம் பேர், 2020ல் நாட்டின் முக்கிய கவனம் ‘பெண்கள் பாதுகாப்பு’ மீது இருக்க வேண்டும் என கருதுவதாகக் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
பொருளாதார நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என 12 சதவீதம் பேர் கருதும் நிலையில், 11 சதவீதம் பேர் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கருதுவதாக பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்ட ஆன்லைன் ஆய்வு நிறுவனமான யுகவ் (YouGov) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பிற்கான தரவுகள், டிசம்பர் மாத காலத்தில், யுகவாம்னிபஸ் மூலம் ஆன்லைனில் சேகரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து இதில், 1011 பேர் பங்கேற்றனர்.
பெரும்பாலானோர் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கூறியதோடு, 45 சதவீதம் பேர், 2019 ல் இது மேம்படவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினர் மத்தியிலும் (43 % ஆண்கள், 48 % பெண்கள்) இதில் ஒருமித்த கருத்து நிலவினாலும், வயது வரம்பில் வேறுபாடு காணப்பட்டது. மில்லினியல் தலைமுறையில் 40 சதவீதம் பேர் 2019ல் பெண்கள் பாதுகாப்பு மேம்படவில்லை என கூறிய நிலையில், ஜென் எக்ஸ் தலைமுறையில் 52 சதவீதம் பேர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், 39 சதவீதம் பேர் 2019ல் பொருளாதாரம் மேம்படவில்லை என்றும், 35 சதவீதம் பேர் அரசியல் சூழல் மேம்படவில்லை என்றும், அதே அளவு நபர்கள் வேலைவாய்ப்பு மேம்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும், 35 சதைவீதம் பேர் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு துறை நிகழ்வுகள் மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், அரசியல் நிகழ்வுகளும் ஆதிக்கம் செலுத்தியதாக இந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டின் முக்கிய அரசியல் நிகழ்வு எது என கேட்கப்பட்டதற்கு அரசியல் ஷரத்து 35 ஏ ரத்து செய்யப்பட்டது என 28 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதே போல, அம்பானி திருமணம், பிரென்ஸ்ட் 25வது ஆண்டு விழா, 29019 கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகிய நிகழ்வுகளும் முக்கியமாக அமைந்தன.
எனினும், அரசியல், கலாச்சாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து முன்னணி நிகழ்வை தேர்வு செய்ய கேட்கப்பட்ட போது, 24 சதவீதம் பேர் ஷரத்து 35 ஏ ரத்து செய்யப்பட்டத்தை தேர்வு செய்தனர். ஆயோத்தி வழக்கு தீர்ப்பு மற்றும் பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன.
2022ம் ஆண்டை பொருத்தவரை, சந்திராயன்-3 திட்டம் இந்த ஆண்டில் பெரிய திட்டமாக இருக்கும் என 20 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 16 சதவீதம் பேர், டி-20 உலக கோப்பை போட்டி முக்கிய நிகழ்வாக அமையும் என கூறியுள்ளனர்.
மெதுவான ஜிடிபி வளர்ச்சி முக்கிய நிகழ்வாக இருக்கும் என 14 சதவீதம் பேர் தெரிவித்தனர். நாசாவின் செவ்வாய் திட்டம் குறித்து 12 சதவீதம் பேரும், இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து 10 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முக்கியமாக அமையும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
செய்தி: பிடிஐ |தமிழில்: சைபர்சிம்மன்