'குளோபல் ஸ்டார்ட்-அப் மையம்' அமைக்க 'Start-up TN' அதிகாரிகள் அமெரிக்கா பயணம்!
ஸ்டார்ட் அப் டிஎன் நிறுவனம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு கிடைக்க முதலீட்டாளர் சந்திப்பு, சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய, 'ஸ்டார்ட் அப்' மையம் அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக, ஸ்டார்ட் அப் டி.என். உயரதிகாரிகள், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தற்போது தமிழகத்தில், 8,500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. மின் வாகன உற்பத்தி, ஆன்லைன் வேளாண் பொருட்கள் விற்பனை உட்பட பல்வேறு வளர்ந்து வரும் தொழில் துறைகளில் புதிய நிறுவனங்களை, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கி வருகின்றன.
இந்நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, உலகஅளவில் சந்தையை ஏற்படுத்தி தரவும், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு கிடைக்கவும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் உலகளாவிய ஒருங்கிணைப்பு மையம் அமைக்க, ஸ்டார்ட் அப் டி.என். இலக்கு கொண்டுள்ளது. இதனையடுத்து, முதலாவது ஒருங்கிணைப்பு மைய துபாயில் அமைக்கப்பட்டது.
![Startuptn GCC](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Startuptngcc-1720253243627.png?fm=png&auto=format&w=800)
துபாய் ஒருங்கிணைப்பு மையத்தை தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் இம்மாத இறுதிக்குள் திறந்து வைக்க உள்ளார். இதைதொடர்ந்து, உலகளாவிய ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் துவக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் அன்பரசன், சட்டப்பேரவையில் சமீபத்தில் வெளியிட்டார்.
அந்த மையத்தை அமைக்க இடம் போன்றவற்றை அடையாளம் காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக தற்போது ஸ்டார்ட் அப் டி.என். தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உட்பட அதிகாரிகள் குழு, அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர்.
ஸ்டார்ட் அப் டிஎன் நிறுவனம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீடு கிடைக்க முதலீட்டாளர் சந்திப்பு, சந்தைப்படுத்தும் வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குவது குறிப்பிடத்தக்கது.