மத்திய பட்ஜெட் 2024: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு குட் நியூஸ்: முத்ரா கடன் திட்ட உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு!
2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முத்ராதிட்டத்துக்கான கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
முத்ரா கடன் உதவித் திட்டத்தில் சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூ 10 லட்சமாக வழங்கப்பட்டு வந்த கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. நேற்று பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் (MSME) வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், முத்ராதிட்டத்துக்கான கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்ரா யோஜனா திட்டத்தைக் கொண்டுவந்தது. இத்திட்டத்தின் கீழ் சிஷு பிரிவின்கீழ், ரூ.50,000 வரையிலும், கிஷோர் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் பிரிவின் கீழ், ரூ.10 லட்சம் வரையிலும் கடனாக வழங்கப்படுகிறது.
![MSME](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/MSME-1721792030815.jpg?fm=png&auto=format&w=800)
மேலும், வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன்களை வழங்கி வருகின்றன. இத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் எதையும் பிணையாகக் கொடுக்காமலேயே இந்தக் கடன் சலுகையைப் பெற முடியும் என்பதே. இந்நிலையில், தருண் பிரிவின் கீழ் ரூ.10 லட்சமாக இருந்தது. இந்நிலையில், தற்போது ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மேம்பாட்டிற்காக 8 புதிய நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்:
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.100 கோடி வரை கடன் உத்தரவாதம் வழங்க சுயநிதி உத்தரவாத நிதி உருவாக்கப்படும் என்றும், கடன் தொகை அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வெளியார் மதிப்பீட்டிற்கு மாறாக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான திறனை பொதுத்துறை வங்கிகள் உள்நிலை மதிப்பீட்டை சார்ந்திருக்கும் என்றும், இதற்கு புதிய, சுயேச்சையான நடைமுறை உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முந்தைய கடனை வெற்றிகரமாக திருப்பி செலுத்திய நிறுவனங்களுக்கான முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சம் என்பதிலிருந்து, ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
பெரிய நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் அளவு ரூ.500 கோடியிலிருந்து ரூ.250 கோடியாக குறைக்கப்படும். இதன்மூலம் 7,000 –க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த திட்டத்தின்கீழ் பயனடையும்.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களின் பொருட்களை சர்வதேச சந்தைகளில் விற்பதற்கு வசதியாக அரசு, தனியார் துறை பங்களிப்புடன் இ-வணிக ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
![](https://images.yourstory.com/assets/images/alsoReadGroupIcon.png?fm=png&auto=format)
மத்திய பட்ஜெட் 2024: விவசாயம் மற்றும் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு!