'இதுக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன்' - 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உருக்கம்!
கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அதன் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரு நிறுவனங்கள் பணிநீக்கம் என்ற விஷயத்தை கையில் எடுத்துள்ளன. கடந்த ஆண்டு இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 18,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ட்விட்டரின் உரிமையாளரான எலான் மஸ்க், நிறுவனத்தின் 50 சதவீத ஊழியர்களை, அதாவது, சுமார் 3,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். இவை தவிர பல முன்னணி நிறுவனங்களும் ஊழியர்களை குறைத்து வருகின்றன.
இந்தப் பட்டியலில் தற்போது கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கூகுள் ஊழியர்கள் பணிநீக்கம்:
அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களைப் பொறுத்து சில நாட்கள் ஆகலாம் எனக்கூறப்படுகிறது.
ஆல்பபெட் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில்,
“சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சுமார் 12,000 பணியாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்," எனக்குறிப்பிட்டுள்ள அவர், நம்பமுடியாத திறமையான பணியாளர்களிடம் விடைபெறும் நேரம் இது என்றும் அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் பிச்சை மின்னஞ்சலில் தெரிவித்தார்.
இந்தப் பணியிடங்கள் நீக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு முழுப்பொறுப்பே அவரே என்றார்.
“கடினமாக உழைத்த நம்ப முடியாத திறமை வாய்ந்த பணியாளர்கள் சிலரை விடுவிக்கப்போவதை அடுத்து, நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மாற்றங்கள் கூகுளைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னை மிகவும் பாதிக்கிறது. மேலும் எங்களை இப்படியொரு முடிவெடுக்க வழிநடத்தியதற்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.”
கடந்த இரண்டு ஆண்டுகளில், வியத்தகு வளர்ச்சியின் காலகட்டங்களைக் கண்டோம். அந்த வளர்ச்சியைப் பொருத்த மற்றும் எரிபொருளாக, இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதாரத்தை விட வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை நாங்கள் பணியமர்த்தினோம்.
எங்கள் பணியின் வலிமை, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு மற்றும் எங்கள் ஆரம்ப முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக எங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பைப் பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். அதனை முழுமையடையச் செய்ய, நாம் கடினமான தேர்வுகளைச் செய்ய வேண்டும்.
எனவே, ஒரு நிறுவனமாக எங்களின் உயர்ந்த முன்னுரிமைகளுடன் எங்கள் ஊழியர்கள் மற்றும் பாத்திரங்கள் சீரமைக்கப்படுவதை உறுதிசெய்ய, தயாரிப்புப் பகுதிகள் மற்றும் செயல்பாடுகள் முழுவதும் கடுமையான மதிப்பாய்வை மேற்கொண்டுள்ளோம். அந்த மதிப்பை பிரதிபலிக்கு விதமாகவே பணி நீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. அதன் படி, ஆல்பபெட், புரோடெக்டட் ஏரியா, லெவல் மற்றும் பகுதி வாரியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எங்களை விட்டு வெளியேறும் கூகுளர்களுக்கு: எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவ கடினமாக உழைத்ததற்கு நன்றி. உங்கள் பங்களிப்புகள் விலைமதிப்பற்றவை மற்றும் நாங்கள் அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த மாற்றம் எளிதானது அல்ல என்றாலும், ஊழியர்களின் அடுத்த வாய்ப்பைத் தேடும் போது நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம், என சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
ஊழியர்களுக்கான நன்மைகள்:
கூகுள் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள அமெரிக்க ஊழியர்களுக்கு 60 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் தொகுப்பின் கீழ், 16 வாரச் சம்பளத்துடன் சேர்த்து, கூகுளில் அவர் பணிபுரிந்த காலத்திற்கு ஆண்டுக்கு இரண்டு வாரச் சம்பளம் வழங்கப்படும் என்று பிச்சை கூறியுள்ளார். மேலும், வேலை இழந்தவர்களுக்கு 2022ஆம் ஆண்டுக்கான போனஸுடன் விடுமுறை காலம், ஆறு மாத ஹெல்த் இன்சூரன்ஸ், வேலை வாய்ப்பு சேவைகள் மற்றும் குடியேற்ற ஆதரவு ஆகியவை வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மறுபுறம், உலகெங்கிலும் உள்ள மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் பேர் ஆல்பபெட் தொடர்பான நிறுவனங்களில் நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக திறமையான ஊழியர்கள் ஏராளமானோரை கூகுள் நிறுவனம் பணியமர்த்தி வந்தது.
இந்நிலையில், உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக, பிற நிறுவனங்களைப் போல அதுவும் பணி நீக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது ஐ.டி. ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.