மேலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்விட்டர் நிறுவனம் திட்டம்!
இந்த பணிநீக்கத்துக்குப் பிறகு, ட்விட்டரில் மொத்தமாக 2,000த்துக்கும் குறைவான ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடக நிறுவனம் ட்விட்டர் வரும் வாரங்களில் தனது தயாரிப்புப் பிரிவில் உள்ள 50 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்சைடர் அறிக்கையின்படி, இந்த பணிநீக்கம் ட்விட்டரின் ஊழியர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் இந்த நடவடிக்கைக்குப் பின்னர் ட்விட்டரில் 2,000-க்கும் குறைவான ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். இதுவே ட்விட்டரின் மிகக் குறைந்த ஊழியக்ரள் எண்ணிக்கை அளவாக இருக்கும்.
எலான் மஸ்க் ட்விட்டர் கையகப்படுத்தலின் $44 பில்லியன் ஒப்பந்தத்தை முடித்த பிறகு, செலவைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். நிறுவன பணியாளர்களை 50% க்கும் அதிகமாகக் குறைத்துள்ளார். மஸ்க் கையகப்படுத்தப்பட்ட பிறகு ட்விட்டரில் இருந்து பல ஊழியர்களும் வெளியேறியுள்ளனர்.
சமூக ஊடக நிறுவனத்தின் உரிமையை எடுத்துக் கொண்ட பிறகு, மஸ்க் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க முயன்றது மற்றும் அதன் வருவாயை பெருக்க, சந்தா சேவையான Twitter Blue மூலம் புதிய வழிகளை அறிமுகப்படுத்தினார்.
கடந்த காலத்தில், ட்விட்டர் முக்கியமாக விளம்பர வருவாயை நம்பியிருந்தது. இருப்பினும், தர்போது விளம்பர வருவாயில் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில், ட்விட்டர் நிறுவனம் வருமானம் ஈட்ட பயனர் பெயர்களை விற்பனை செய்வதை பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ட்விட்டரின் நான்காவது காலாண்டு வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 35% சரிந்து 1.025 பில்லியன் டாலராக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர், மெட்டா வரிசையில் கூகுள்; 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!