Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

பொய் தகவல்களை தடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் கரம் கோர்த்த கூகுள்!

தேர்தலையொட்டி தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க கூகுளுடன் இந்திய தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது.

பொய் தகவல்களை தடுக்க இந்திய தேர்தல் ஆணையத்துடன் கரம் கோர்த்த கூகுள்!

Thursday March 14, 2024 , 2 min Read

தேர்தலையொட்டி தவறான மற்றும் பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க கூகுளுடன் இந்திய தேர்தல் ஆணையம் கைகோர்த்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் தேர்தல் வியூகங்களில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி ஒரே நேரத்தில் 195 வேட்பாளர்களை அறிவித்தது. காங்கிரஸ் (காங்கிரஸ்) கட்சி இரண்டு பட்டியல்களில் 82 பேரின் வேட்புமனுவை இறுதி செய்துள்ளது. மறுபுறம், இந்திய தேர்தல் ஆணையம் கூகுளுடன் கைகோர்த்துள்ளது.

பொய் தகவல் பரவுவதை தடுக்க முயற்சி:

தேர்தலையொட்டி பொய் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான உதவியை கூகுள் எடுத்து வருகிறது. அதிகாரிகள் அளிக்கும் தகவல்கள் மட்டுமே மக்களை சென்றடையும் வகையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களை தடை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

google

கடந்த மாதம் டீப் பேக் (Deep Fake) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபல நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் தீயாய பரவின. இது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. தற்போது மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், டீப் ஃபேக், ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிலர் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதால், இந்திய தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது.

தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. வாக்காளர்களுக்கு துல்லியமான தகவல்களை அளிக்கும் நோக்கில் செயல்படும் என்று கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தலின் போது தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க சிறப்பு நடைமுறைகளை உருவாக்கியுள்ளது.

கூகுள் விளம்பரங்களிலும் கவனம்:

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வது எப்படி? எப்படி வாக்களிப்பது? நான் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டுமா? வாக்குச்சாவடி மையத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? வாக்காளர் பட்டியலில் பெயர் எங்கே? போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வதை எளிதாக்க EC உடன் Google இணைந்து பணியாற்ற உள்ளது. இந்த தகவல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கிடைக்கும்.

google

தேர்தல் தகவல் மீதான கட்டுப்பாடுகள்:

தேர்தல் முறையைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல், வன்முறையைத் தூண்டுதல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு போன்ற பிரச்சனைகளில் Google கொள்கைகளை உருவாக்கியுள்ளது. கொள்கைக்கு எதிரான உள்ளடக்கத்தை அகற்ற பணியாட்கள் மற்றும் சிறப்பு கோடிங்குகளை கூகுள் பயன்படுத்தவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை எளிதில் அடையாளம் காணப்படவுள்ளது. டீப்ஃபேக், மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தடுக்கவும், AI உதவியுடன் YouTube இல் உருவாக்கப்படும் தவறான கன்டென்ட்களை தடை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.