ரூ.79.8 கோடி; இந்திய ஐ.டி. துறையில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ யார் தெரியுமா?
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் சிஇஓவாக விப்ரோ டெலாபோர்ட் உள்ளார். இவரது சம்பளம் 79.8 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் சிஇஓவாக விப்ரோ டெலாபோர்ட் உள்ளார். இவரது சம்பளம் 79.8 கோடி ரூபாய் ஆகும்.
2022ம் நிதியாண்டிற்காக சிஇஓக்களின் சம்பள பட்டியலின் படி, விப்ரோ சிஇஓ ரூ.79.8 கோடி, இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக் ரூ.71 கோடி, டிசிஎஸ் சிஇஓ & எம்டி ராஜேஷ் கோபிநாதன் 25.8 கோடி ரூபாயும் பெற்று வருகின்றனர்.
மார்ச் 31, 2022ல் நிறைவடைந்த நிதியாண்டின் படி, விப்ரோ சிஇஓ தியரி டெலாபோர்ட் வருடத்திற்கு 10.51 மில்லியன் அதாவது, இந்திய மதிப்பில் 79.8 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
அவர், அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் இந்த தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையிலேயே அதிக சம்பளம் பெறும் நம்பர் ஒன் சிஇஓ என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
FY21 இல், டெலாபோர்ட்-ன் ஆண்டு சம்பளம் ரூ 64.3 கோடி ($8.7 மில்லியன்) ஆக இருந்தது. 55 வயதான டெலாபோர்ட் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் விப்ரே நிறுவனத்தின் சிஇஓவாக பதவியேற்றார்.
2022ம் நிதியாண்டின் படி, விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி டேக் ஹோம் ஊதியமாக 1.74 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 13.2 கோடி ரூபாயை ஊதியம் மற்றும் அலவன்ஸ்கள் மூலமாக பெறுகிறார்.
கமிஷன்கள் மற்றும் மாறுபட்ட ஊதியம் மூலமாக ரூ.19.3 கோடியையும் ($2.55 மில்லியன்), பிற அலவன்ஸ்கள் மூலமாக ரூ.31.8 கோடியையும் ($4.2 மில்லியன்) பெறுகிறார். டெலாபோர்ட்டின் மீதமுள்ள ஊதிய தொகுப்பு நீண்ட கால இழப்பீடு அல்லது ஒத்திவைக்கப்பட்ட பலன்களால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஜூலை 2020ல் நடந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், விப்ரோ தலைமை நிர்வாக அதிகாரி டெலாபோர்ட்டிற்கு 'ஒன் டைம் கேஷ் அவார்ட்' (one-time cash awards) தொகுப்பிற்காக பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டார்.
விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கடந்த ஆண்டு 1.62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்ட நிலையில், FY22ம் ஆண்டு அது 1.82 மில்லியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருடைய காம்பென்சேஷன் தொகையும் 11.8 கோடி ரூபாயில் இருந்து 13.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இன்ஃபோசிஸின் வருடாந்திர அறிக்கையின் படி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சலில் பரேக்கின் இழப்பீடு கடந்த நிதியாண்டை விட 43 சதவீதம் உயர்ந்து ரூ.71 கோடியாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், அவரது சம்பளமும் முந்தைய பேக்கேஜை விட 88 சதவீதம் உயர்த்தப்பட்டு, 79.75 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டிசிஎஸ்-யின் சிஇஓ மற்றும் எம்.டி. ராஜேஷ் கோபிநாத் வருடாந்திர ஃபேக்கேஜ் ஆக ரூ.25.8 கோடி பெறுகிறார். இது கடந்த ஆண்டை விட 26.6 சதவீதம் அதிகம் என டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - பிசினஸ் ஸ்டாண்டர்ட் | தமிழில் - கனிமொழி