நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடுவதற்கு அழைப்பு!
நகைச்சுவை நடிகர் விவேக் நினைவை போற்றும் வகையில், அவர் மிகுந்த ஈடுப்பாட்டுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த மரம் நடும் இயக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் மரக்கன்றுகளை நடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமும், அக்கறையும் கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் விவேக் மரக்கன்றுகள் நடுவதிலும் தனி ஆர்வம் கொண்டிருந்தார். அவரது நினைவாக சென்னை உள்ளிட்ட இடங்களில் 5.6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட திட்டமிடப்பட்டு, இதற்காக மரக்கன்றுகளை நடுவதற்கு வருமாறு அவரது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனங்களின் கலைஞன் என போற்றப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பால் காலமானார். அவரது எதிர்பாராத மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படங்களில் தனது நகைச்சுவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்திய நடிகர் விவேக், நிகழ்ச்சிகள் மூலம் சுற்ற்சூழல் மற்றும் மரம் நடும் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வையும் மேற்கொண்டு வந்தார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்ட விவேக், அவரது பெயரில் பசுமை கலாம் எனும் மரம் நடும் இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்தார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்பட்டு வந்தது.
2011ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 33 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன,
இந்நிலையில், நடிகர் விவேக் எதிர்பாராதவிதமாக மறைந்ததை அடுத்து அவர் நினைவாக, மரக்கன்றுகளை நடும் திட்டத்தை மேற்கொள்ள,
”Communitree என்ற அமைப்பு சென்னை உள்ளிட்ட 32 இடங்களில் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக மரக்கன்றுகளை நடுவதற்கு முன் வருமாறு விவேக் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மரக்கன்றுகளை நடுவதற்கான இடத்தை அளித்து அதை பரமாரிக்கவும் இந்த அமைப்பு உறுதி அளித்துள்ளது.”
சென்னையைச் சேர்ந்த Communitree என்ற தன்னார்வ அமைப்பு, ஏற்கனவே தமிழ்நாடு. கர்நாடகாவில் இதுவரை 5.6 லட்சம் மரங்களை ஏற்கனவே நட்டு, பராமரித்து வருகிறது. இது விவேக் நினைவாக மரக்கன்று நடுவதற்கு தொடர்பு கொள்ள: 9787722849.