விண்ணுக்கு மனிதனை அனுப்பும் நாசா கனவு திட்டத்தின் முக்கியப் பொறுப்பில் தமிழ் பெண்!
'Artemis Mission' பணிகள் மேற்பார்வையிடும் சுபாஷினி ஐயர்!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கனவுத் திட்டமான சந்திரனுக்கு மனிதர்களை விண்கலத்துடன் அனுப்பும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மனிதர்களை அனுப்பும், ‘ஆர்ட்டெமிஸ் மிஷன்' 'Artemis Mission' திட்டத்தின் முதுகெலும்பாக அதாவது மேற்பார்வையிடும் அதிகாரியாக தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட சுபாஷினி ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சுபாஷினி கோவையில் பிறந்தவர்.
கோயம்புத்தூரில் உள்ள விஎல்பி ஜானகியம்மாள் கல்லூரியில் 1992ம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்ற இவர், அந்த கல்லூரியின் மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் முதன் முறையாக பட்டம் பெற்ற பெண்களில் ஒருவர் ஆவார். பல ஆண்டுகள் முன் வேலை நிமித்தமாக அமெரிக்கா சென்ற சுபாஷினி, கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் நாசாவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான் சந்திரனுக்கு அனுப்பப்படும் விண்கலத்தின் 'ஆர்ட்டெமிஸ் மிஷன்' திட்டத்தின் முக்கியப் பகுதிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணிக்கு தலைமை தாங்கி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்,
“நாங்கள் கடைசியாக சந்திரனில் காலடி எடுத்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதர்களை சந்திரனுக்கும் அதற்கு அப்பாலும் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல நாங்கள் தயாராகி வருகிறோம். இதற்கான ராக்கெட்டை தயாரித்து நாசாவிடம் ஒப்படைக்கப்படுவதை கண்காணிப்பதும், இதர தேவைகளை பூர்த்தி செய்து தருவதும்தான் எனது பணியாகும்," என்றுள்ளார்.
‘ஆர்ட்டெமிஸ் மிஷன்' என்பது எஸ்எல்எஸ் ராக்கெட் மற்றும் ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை, மனிதர்களை சந்திரனின் சுற்றுப்பாதைக்கு அனுப்பம் லட்சியம் கொண்ட திட்டமாகும்.
ஆர்ட்டெமிஸ் எல் விண்கலமான ஓரியனின் திறக்கப்படாத விமானமாக இருக்கும் - இது சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்கான மூன்று சிக்கலான பயணங்களில் முதலாவதாகும்.
ஓரியன் மூன்று வாரப் பயணத்தில் பூமியிலிருந்து 280,000 மைல்கள் (4,50,000 கி.மீ.க்கு மேல்) பயணிக்கும். ஆர்ட்டெமிஸ் எல்.எல்.க்கு மேடை அமைப்பதற்காக விண்கலத்தின் செயல்திறனைக் காட்டிலும் மிஷன் கன்ட்ரோலர்கள் செல்லும் போது தரவைச் சேகரிப்பதே இதன் நோக்கம்.
ஒரு குழு விண்கலம் சந்திரனைச் சுற்றி வரும். 2024 ஆம் ஆண்டளவில், ஆர்ட்டெமிஸ் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் உதவி - indiatimes | தொகுப்பு: மலையரசு