இந்திய இணைய பயனாளிகள் எண்ணிக்கை 907 மில்லியனாக உயரும்!
இந்திய இன்டெர்நெட் பயனாளிகள் எண்ணிக்கை 2018ல் 398 மில்லியனாக இருந்த நிலையில் இருந்து, 2023ல் 907 மில்லியனாக அதிகரிக்கும் என சிஸ்கோ நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
இந்திய இணைய பயனாளிகள் எண்ணிக்கை 2018ல் 398 மில்லியனாக இருந்த நிலையில் இருந்து, 2023ல் 907 மில்லியனாக அதிகரிக்கும் என சிஸ்கோ நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், 2023ல், 210 கோடி இணைக்கப்பட்ட சாதனங்கள் இருக்கும் என்றும் இவற்றில் 25 சதவீதம் இயந்திரங்களால் உணரப்படக்கூடியவையாக இருக்கும் என்றும் சிஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில், 2023ல் 966 மில்லியன் மொபைல் பயனாளிகள் இருப்பார்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. இது மக்கள் தொகையில் 64 சதவீதமாகும். 2018ல் இந்த எண்னிக்கை 763 மில்லியனாக இருந்தது.
மேலும், 20 மொபைல் இணைப்புகளில் ஒன்று 5ஜி இணைப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தியாவில் சாதனங்கள் மற்றும் இணைப்புகள் மக்கள் தொகையை விட அதிக வேகத்தில் வளர்கின்றன. இந்த போக்கு, சாதனங்கள் மற்றும் இணைப்புகள் அதிகரிக்க வழி செய்து வருகிறது,” என அறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்மார்ட் மீட்டர், வீடியோ கண்காணிப்பு, மருத்துவக் கண்காணிப்பு, போக்குவரத்து உதவி உள்ளிட்டத் துறைகளில் இயந்திரங்களால் உணரக்கூடிய சாதனங்களின் எண்னிக்கை அதிகரித்து வருகிறது.
இணைக்கப்பட்ட சாதனங்களில் ஸ்மார்ட்போன்கள் 38 சதவீதமாகவும், டிவிகள் 12 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. 2023ல் இந்தியாவில் இணைக்கப்பட்ட சாதனங்களில் 78 சதவீதம் நுகர்வோர் பிரிவில் இருக்கும். 2018ல் இது 83 சதவீதமாக இருந்தது.
சமூக வலைப்பின்னல் சேவை, வீடியோ ஸ்டிரீமிங், இ-காமரஸ் ஆகியவை மொபைல் செயலிகள் வளர்ச்சிக்கு வித்திடும் என்றும், 2023ல் 46.2 பில்லியன் முறை டவுண்லோடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்வி, மொபைல் பயன்பாடு, இணைய வசதி ஆகியவை இந்தியாவின் உள்பகுதிகளுக்கு எல்லாம் பரவும் போது, இணைய பயன்பாடு மற்றும் நுகர்வு போக்கிலும் பெரிய அளவில் மாற்றம் வரும் என்றும் சிஸ்கோ இந்தியா-சார்க் நிர்வாக இயக்குனர் ஆனந்த் பாஸ்கர் கூறியுள்ளார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்