கர்நாடகா: மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி செல்ல Rapido-வில் இலவச சவாரி!
ரேபிடோ ‘சவாரி ஜிம்மேதாரி கி’ என்ற புதிய முயற்சியின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான மூத்தகுடிமக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வசதி செய்து தரும் வகையில் தங்கள் சேவையை இலவசம் என்று அறிவித்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நாளை (வெள்ளிக்கிழமை, 26-4-2024) மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, சவாரி தளமான ரேபிடோ ‘சவாரி ஜிம்மேதாரி கி’ என்ற புதிய முயற்சியின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான மூத்தகுடிமக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வசதி செய்து தரும் வகையில் தங்கள் சேவையை இலவசம் என்று அறிவித்துள்ளனர்.
பெங்களூரு, மைசூரு மற்றும் மங்களூருவில் உள்ள வாக்காளர்கள் ஏப்ரல் 26 அன்று
-வில் புக் செய்யும்போது ‘VOTENOW’ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி வாக்குச்சாவடிகளுக்கு இலவச சவாரிகளைப் பெறலாம். வாக்குச் சாவடி செல்வதற்கு மட்டுமல்ல திரும்பி வீட்டில் கொண்டு வந்து விடவும் இலவசம்தான் என்று ரேபிடோ அறிவித்துள்ளது.இது தொடர்பாக ரேபிடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,’
"இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) ஆகியவற்றுடன் இணைந்து, 2024 பொதுத் தேர்தலின் போது, பெங்களூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச ஆட்டோ மற்றும் கேப் சவாரிகளை விரிவுபடுத்துவதன் மூலம், ரேபிடோ மக்களுடனான ஈடுபாட்டை வலுப்படுத்த முன் வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைச் செயல்படுத்த மற்றவர்களுக்கு சரி நிகர் சமமான அணுகலைப் பெறுவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளது ரேபிடோ.