Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

Budget2020: நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்- பகுதி 2

கல்வித்துறை மற்றும் அரசுத்துறைகளில் பட்ஜெட்2020-ல் என்னென்ன அறிவிப்புகள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

Budget2020: நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்-  பகுதி 2

Saturday February 01, 2020 , 1 min Read

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1
  • இந்திர தனுஷ்திட்டம் விரிவாக்கம். கூடுதலாக 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்றும் அரசுப் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
  • சுகாதாரக் கட்டமைப்புகளுக்குமுன்னுரிமை. 2025ம் ஆண்டுக்குள் நாட்டில் காச நோயை முற்றிலுமாக ஒழிக்கத்திட்டம்.
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி நிதி ஒதுக்கீடு.
  • புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும். சிறந்த கல்வியை வழங்கும் வகையில், நேரடி அந்நிய முதலீடு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான கல்வித் திட்டம் அறிமுகம்.
  • வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் வகையில் “இந்தியாவில் கல்விக் கற்க வாருங்கள்” திட்டம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலப்படுத்தப்படும்.
  • மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கவும், கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கவும் திட்டம்.
  • கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • தொழில் முனைவோரே இந்தியாவின் பலம். வேலைவாய்ப்பை உருவாக்குவோர் அவர்களே. அவர்களின் முதலீட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க சிறப்பு பிரிவு
  • ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் எளிதாக்க முயற்சி.
  • உற்பத்தியை பெருக்கத் திட்டம். தேசிய தொழில்நுட்ப ரீதியிலான ஜவுளி இயக்கம் உருவாக்கம்
  • தொழில்துறைக்கும், வர்த்தகத் துறைக்கும் 27,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  •  கட்டமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை - கட்டமைப்புத் துறைக்கு 100 லட்சம் கோடி ரூபாய் - 5 புதியபொலிவுறு நகரங்கள் ஏற்படுத்தப்படும்.
  • புதிய கட்டமைப்புத்திட்டம் நிர்விக்க அறிவிப்பு
  • தில்லி-மும்பை இடையேயான அதிவிரைவுச் சாலை 2023 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
  • ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், கூடுதலாக தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும், 27,000 கிமீ தொலைவுக்கு ரயில்பாதை மின்மயமாக்கல்
  • துறைமுகங்களை மேம்படுத்தநடவடிக்கை, முக்கியத் துறைமுகம் ஒன்று நிறுவனமயமாக்கப்படும்.
  • மின்சாரத் துறைக்கு புதிய உத்வேகம் அளிக்க திட்டம், புதிய ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை. 2023 ஆம் ஆண்டுக்குள் ப்ரீ-பெய்டு டிஜிட்டல் மீட்டர் வசதி அறிமுகம்.