Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'வரும் பட்ஜெட்டில் பல வரலாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' - குடியரசுத் தலைவர் முர்மு உறுதி!

“60 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை., என குடியரச்த் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

'வரும் பட்ஜெட்டில் பல வரலாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' - குடியரசுத் தலைவர் முர்மு உறுதி!

Thursday June 27, 2024 , 2 min Read

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரவிருக்கும் பட்ஜெட்டில் பல முக்கிய பொருளாதார முடிவுகள் எடுக்கப்படும் என்றும் பல வரலாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றும் கூறினார்.

18-வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. அனைத்து எம்.பி.க்களுக்கும், மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கும் வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,

“60 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து 3-வது முறையாக ஒரே அரசை மக்கள் தேர்வு செய்துள்ளனர். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை,'' என்றார்.

உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்று, போர் போன்ற சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா வளர்ந்த நாடாக உருவாகும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் உறுதிமொழி இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது.

Murmu
"வரும் பட்ஜெட் முக்கிய பொருளாதார மற்றும் சமூக முடிவுகளைக் கொண்டிருக்கும் மற்றும் பல வரலாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற சீர்திருத்தங்களின் வேகம் அதிகரிக்கப்படும். இது போட்டி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியின் தத்துவத்தில் நடைபெறும்.

இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. கொரோனா பெருந்தொற்று, போர் போன்ற சவால்களை கடந்து இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும்.

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவற்றின் உறுதிமொழி இந்தியாவை உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக மாற்றியுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாடு முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகளால் இது சாத்தியமானது.

இன்று உலக வளர்ச்சியில் இந்தியா 15% பங்களிப்பை வழங்குகிறது. இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் நோக்கில் எனது அரசு செயல்பட்டு வருகிறது.

உலக அளவில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. விவசாயம், தொழில்நுட்படம், சேவை துறைக்கு இந்த அரசால் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தற்சார்பு இந்தியாவுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டியால் தொழில்துறை பலனடைந்துள்ளது. தமிழ்நாடு, உத்தர பிரதேசத்தில் பாதுகாப்புத் துறை தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதியில் அதிகரித்து வருகின்றன. இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் உதவுகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது, இதனால் மாநிலங்கள் பயனடைந்துள்ளன, என பொருளாதாரம் குறித்து தன் உரையில் பேசினார் திரௌபதி முர்மு.