'அரிய நோய்; நிராகரிக்கப்பட்ட நிபுன்' - கலங்க வைக்கும் தாயின் போராட்டம்!
‘ஊனம் என்பது உடல் போன்ற சதை கொண்ட அமைப்புக்குத் தானே தவிர, உறுதியான மனதுக்கல்ல’.
’ஊனம் என்பது உடல் போன்ற சதை கொண்ட அமைப்புக்குத்தானே தவிர, உறுதியான மனதுக்கல்ல’. ‘வெற்றி பெறுவதற்கு உடல் வலிமை மட்டும்போதாது, மன வலிமைதான் முக்கியம்,’ இது புரூஸ்லியின் வார்த்தைகள். உடலால் அவ்வளவு வலிமையானவர் என்று போற்றப்பட்ட புரூஸ்லியே ஒப்புக்கொண்ட உண்மை இது.
ஆம்! உடல் என்பது செயல்படுவதற்கான ஒரு டூல் மட்டும்தான். அதற்கான உந்துசக்தி என்பது மனம் தான்.
மேற்சொன்ன வார்த்தைகளை தன் வாழ்நாளில் நிஜமாக்கியிருக்கிறார் நிபூன் மல்ஹோத்ரா. மற்றவர்களுக்கு உதாரணமாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் திகழ்கிறார்.
சரி யார் இந்த நிபூன் மல்ஹோத்ரா?
1987ல் நிபூன் மல்ஹோத்ரா பிறந்தபோது, அவரது கைகள் மற்றும் கால்கள் இரண்டிலுமே எலும்புகள் முறிந்த நிலையில், வலுவில்லாமல் இருந்தது. அதுமட்டுமின்றி உடல்முழுவதுமே ஒருவித நீலநிறத்துடன் காணப்பட்டது. ’ஆர்த்ரோகிரிபோசிஸ்’ என்ற அரிய பிறவி குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டு பிறந்தவர்.
காலம் தான் எத்தனை கொடுமையானது!
இந்த நோயால் பிறக்கும் குழந்தையின் கால்களில் உள்ள தசைகள் முழுமையாக உருவாகாமல் இருக்கும். அவர் வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் கட்டப்பட்ட ஒரு மர பொம்பையைப் போலவே வாழ்வார் என அவரது பெற்றோர்களிடம் மருந்துவர்கள் கூறும்போது, நிச்சயம் அவர்கள் உடைந்துதான் போயிருப்பார்கள்.
ஆனால் உண்மையில் அவர்கள் அதை உடைத்தெறிய விரும்பினார்கள். அதன்படிதான் இன்று நிபூன், ஊனமுற்றவர்களுக்கு உதவக்கூடியவராகவும், தாயுடன் இணைந்து நிற்மேன் என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.
“அந்த நேரத்தில், இந்த நோய் குறித்து எனக்கு அதிக விழிப்புணர்வு இல்லை. என்னுடைய மகன் எதிர்கொள்ளும் பிரச்சினையைப் பற்றி கிடைக்கக்கூடிய தரவுகளைக் கொண்டு நான் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. இந்த நோயை ‘மர பொம்மை’ என்று ஒப்பிட்டார்கள். அவனால், சிரிக்க முடிகிறது என்றால் ஏன் மற்ற காரியங்களைச் செய்ய முடியாது என்பதை சிந்தித்தேன்.
அப்போது மருத்துவர் ஒருவர் என்னிடம், ‘அவர் ஒருபோதும் தாய்மையின் மகத்துவத்தை விட்டு விலகிவிடமாட்டார்,’ என்று கூறினார். அந்த பாதையில் பயணித்தேன். நான் முன்னேறிக் கொண்டே இருந்தபோது, என் மகன் பதிலளித்துக்கொண்டே இருந்தான். இந்த மாற்றங்கள் நிகழும் என்று கூட நான் நினைத்துப்பார்க்கவில்லை,” என்று தாய் பிரியங்கா கூறியுள்ளார்.
உண்மையில் வாழ்வில் எத்தனை இடையூறுகள் வந்தாலும், மகனுக்கான சரியான பாதையாக விளங்குகிறாள் தாய். அப்படித்தான் பிரியங்காவும். தனது மகனும் மற்றவர்களைப் போல இயல்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், அவரை மற்ற மாணவர்கள் பயிலும் பள்ளியில் சேர்த்தார்.
"என்னை ஒரு சிறப்புப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பலரும் கூறினர். அதிர்ஷ்டவசமாக என்னை, என் அம்மா எனக்கு முற்றிலும் இயல்பான வாழ்க்கையை வழங்க விரும்பினார். அம்மா அன்றைக்கு எடுத்த முடிவினால் தான் இன்று நான் இப்படியான நிலையில் இருக்கிறேன். நான் அதிர்ஷடக்காரன். 15-20 பள்ளிகள் என்னை நிராகரித்தன. அந்த பள்ளியில் இருப்பவர்களே என்னால் என்ன செய்ய முடியும், என்ன செய்யமுடியாது என்பதை தீர்மானித்துக் கொண்டனர். பின்னர் மும்பையில் உள்ள செயின்ட் மேரிஸ் என்ற பள்ளியில் என்னை சேர்த்துக்கொண்டனர்,” என்றார் நிபூன்.
"பின்னர், நான் நிபூனை அப்படியே இருக்க அனுமதித்தேன். எல்லா சிகிச்சையையும் நிறுத்தி, அவனது மனதை தேற்ற ஆரம்பித்தேன். மற்ற எல்லா தெரபிகளையும் நிறுத்திவிட்டேன். நான் என் மகனை வெளியே அழைத்துச் சென்று, வெளி உலகத்தை காண்பித்தேன். பல்வேறு பொருட்களைப் பற்றி அவனுக்கு கற்பித்தேன். அவன் தொட்டு உணர வைத்தேன். இன்னும் பல்வேறு விதமான முயற்சி எடுத்தேன். இதையெல்லாம் பார்த்து என்னை முட்டாள் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் அது பலனளித்தது,” என்று கூறுகிறார் தாய் பிரியங்கா.
தனது தாயின் அர்ப்பணிப்பால் உந்துதல் பெற்ற நிபூன் வெறுமனே உயிர்வாழாமல் தனது வாழ்க்கையை வாழவும் எண்ணினார்.
"எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நீங்கள் உண்மையிலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். என் அம்மாவிடம் அழகான விஷயம் என்னவென்றால், அவர் எத்தனை சவால்களை எதிர்கொண்டாலும் கூட, நான் அதை அறிந்துக்கொள்ளமுடியாத வகையில் பார்த்துக்கொள்வார். அம்மா எப்போதும் எனக்கு பலமாக இருந்தார்,” என கண்ணீர்மல்க கூறுகிறார் நிபூன்.
தனது தாயை தன்னுடைய பாதுகாவலர் என்று அழைத்த நிபூன், பள்ளியில் தான் தனது சிறந்த நண்பராக இருந்தார் . இவர் என் தாயாக கிடைத்தற்கு நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும்,” என்று நெகிழ்கிறார் நிபூன்.
தகவல் மற்றும் படங்கள் உதவி - The Indian Express