Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

'புதிய தொழில் முனைவோர் நாட்டின் முதுகெலும்பு' - ஜன.16-யை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக அறிவித்த பிரதமர்

ஜனவரி 16ம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

'புதிய தொழில் முனைவோர் நாட்டின் முதுகெலும்பு' - ஜன.16-யை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக அறிவித்த பிரதமர்

Sunday January 16, 2022 , 3 min Read

ஜனவரி 16ம் தேதியை தேசிய ஸ்டார்ட் அப் தினமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தொழில் முனைவோருடன் பிரதமர் கலந்துரையாடல்:

பிரதமர் நரேந்திர மோடி புதிய தொழில்முனைவோருடன் நேற்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் , மன்சுக் மாண்டவியா , அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனாவால் , புருஷோத்தம் ரூபாலா, கிஷன் ரெட்டி, பசுபதி குமார் பரஸ், ஜிதேந்திர சிங், ஸோம் பர்காஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Modi

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் 150க்கும் அதிகமான தொழில்முனைவோர் 6 குழுக்களாக பங்கேற்றனர். ஒவ்வொரு குழுவினரும் வேர்களிலிருந்து வளர்ச்சி, உள்ளூரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற ஆறு மையப்பொருள்கள் குறித்து தொழில்முனைவோர் பிரதமர் முன்னிலையில் விளக்கங்கள் அளித்தனர். ஒவ்வொரு மையப்பொருளுக்கும் இரண்டு தொழில்முனைவோர் விளக்கம் அளித்தனர்.


புதிய தொழில்களின் பிரதிநிதிகள் தங்கள் உரையின் போது,

“தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள இத்தகைய வாய்ப்பை வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். புதிய தொழில் சூழலுக்கு ஆதரவு அளிப்பதற்காகவும் அவரது தொலைநோக்கு பார்வைக்காகவும் பாராட்டு,” தெரிவித்தனர்.

வேளாண்மையில் பெருமளவிலான தரவுகள் சேகரிப்பு நடைமுறை , தெரிவு செய்யப்பட்ட வேளாண் வணிக மையத்தை இந்தியாவில் உருவாக்குதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் சுகாதார கவனிப்பை ஊக்குவித்தல், மனநல பிரெச்சனைகளை கையாளுதல், மெய்நிகர் சுற்றுலாக்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சுற்றுலாவையும் பயணத்தையும் மேம்படுத்துதல், கல்வி தொழில் நுட்பம் மற்றும் வேலை கண்டறிதல் , விண்வெளித்துறை, இணையம் இல்லாத சில்லரை வர்த்தகத்தை டிஜிட்டல் வர்த்தகத்துடன் இணைத்தல், பொருள் உற்பத்தி திறனை அதிகரித்தல், பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிகள், நீடிக்கவல்ல பசுமை பொருட்களை அதிகப் படுத்துதல், நீடித்த முறையிலான போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் பல்வேறு பிரிவுகளிலும் அவர்கள் கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.


தேசிய ஸ்டார்ட் அப் நாள்- பிரதமர் மோடி அறிவிப்பு:

புதிய தொழில்முனைவோரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, இந்திய சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை அடையும் போது புதிய தொழில்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்குமென்பதால் சுதந்திரத்தின் 75வது ஆண்டு பெருவிழாவை கொண்டாடும் இந்த ஆண்டில் இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய தொழில்கள் இந்தியா புதிய கண்டுபிடிப்புகள் வாரம் என்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார்.

Modi
"நாட்டின் அனைத்து புதிய தொழில்களையும் புதியனவற்றை கண்டுபிடிக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவர்கள் தான் உலகின் புதிய தொழில்களில் இந்தியாவின் கொடியை ஏற்றுகிறார்கள். இந்த கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் செல்வதற்காக ஜனவரி 16-ஐ தேசிய புதிய தொழில்கள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று பிரதமர் அறிவித்தார்.

புதிய கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்முனைவோரையும் புதிய தொழில்கள் சூழலையும் வலுப்படுத்த இந்தப் புத்தாண்டில் அரசு செய்திருக்கும் மாபெரும் மாற்றங்களின் மூன்று முக்கிய அம்சங்களை பிரதமர் பட்டியலிட்டார்.

முதலாவதாக அரசு நடைமுறை மற்றும் அதிகார வர்க்கத்தின் வலையிலிருந்து புதிய தொழில் முனைவோர்களையும் புதிய கண்டு பிடிப்பாளர்களையும் விடுவிப்பது; இரண்டாவது, புதிய கண்டுபிடிப்பை மேம்படுத்த நிறுவன மயமான நடைமுறையை உருவாக்குவது; மூன்றாவதாக இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் இளம் தொழில் முனைவோர்களுக்கும் உதவி செய்தல் ஆகியவற்றை தெரிவித்தார். இந்த முயற்சிகளின் தொடக்கமாக ‘இந்தியா நிமிர்ந்து நில் இந்தியா’ போன்ற திட்டங்களை பிரதமர் பட்டியிலிட்டார்.

“கூடுதல் வரி பிரச்சனையை நீக்குதல், வரி விதிப்பு முறைகளை எளிதாக, அரசு நிதி உதவிக்கு ஏற்பாடு செய்தல், 9 தொழிலாளர் மற்றும் 3 சுற்றுச்சூழல் விதிகளுக்கு சுயசான்றிதழ் அளிக்க அனுமதித்தல், 25 ஆயிரத்திற்கும் அதிகமான வரிமுறைகளை நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுப்பது அதிகரிக்கும். இ-சந்தையின் புதிய தொழில் நிறுவனங்கள் அரசுக்கு சேவைகள் வழங்க வசதி செய்யப்படும்,” என்றும் பிரதமர் அறிவித்தார்.

குழந்தை பருவத்திலிருந்தே மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புக்கான ஈர்ப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் கண்டுபிடிப்பை அரசின் முயற்சி நிறுவனமயமாக்கும் எனத் தெரிவித்த பிரதமர், 9000- க்கும் அதிகமான அடல் தொழிற் சோதனைக் கூடங்கள் பள்ளிகளின் கண்டுபிடிப்பு வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குவதாகவும், புதிய யோசனைகளுடன் செயல்படவைப்பதாகவும் தெரிவித்தார்.


புதிய ட்ரோன் விதிகளாகட்டும் அல்லது புதிய விண்வெளி கொள்கையாகட்டும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு இளைஞர்களுக்கு வழங்க அரசு முன்னுரிமை அளிக்கிறது என்ற அவர், அறிவுசார் சொத்துரிமைகள் பதிவு தெடர்பான விதிகளையும் கூட நமது அரசு எளிமைப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.


இந்தியாவின் புதிய தொழில்கள் 55 தனி தொழில்களாக செயற்பட்டு வருகின்றன என்று தெரிவித்த மோடி, 5 ஆண்டுகளுக்கு முன் 500க்கும் குறைவாக இருந்த இந்திய தொழில்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்று 60000க்கும் அதிகமாக உள்ளது.

"நமது புதிய தொழில்கள் போட்டியின் விதிகளை மாற்றிக் கொண்டிருக்கின்றன அதனால் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக புதிய தொழில்கள் இருக்கப்போவதாக நான் நம்புகிறேன்," என்று பிரதமர் கூறினார்.
Modi

"கடந்த ஆண்டு நாட்டில் 42 அதிக முதலீட்டு புதிய தொழில்கள் வந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனங்கள் இந்தியாவின் தற்சார்பு , தன்னம்பிக்கையின் அடையாளமாகும். இந்த நூற்றாண்டின் அதிக முதலீட்டு புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதை நோக்கி இந்தியா இன்று துரிதமாக செல்கிறது இந்தியாவின் புதிய தொழில்களின் பொற்காலம் இப்போது தொடங்கிருப்பதாக நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

"உங்கள் கனவுகளை உள்ளூருக்கு உரியதாக வைத்திருக்காமல் அவற்றை உலகுக்கானதாக மாற்றுங்கள் இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள் -இந்தியாவுக்காக புதியன கண்டு பிடிப்போம், இந்தியாவிலிருந்து புதியன கண்டுபிடிப்போம்," என்று புதிய கண்டுபிடிப்பாளர்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

”நான் உங்களோடு நிற்கிறேன், அரசு உங்களோடு இருக்கிறது, ஒட்டுமொத்த நாடும் உங்களோடு நிற்கிறது," என புதிய தொழில்முனைவோருக்கு பிரதர் மோடி உற்சாகமூட்ய படியே தனது உரையை நிறைவு செய்தார்.