Stock News: மாதத்தின் இறுதியில் இப்படியா? முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் பங்குச்சந்தை!
கடந்த வாரத்தைப் போலவே இன்றும் இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு சரிவை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரத்தைப் போலவே இன்றும் இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு சரிவை நோக்கி தீவிரமாக நகர்ந்து வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 930.20 புள்ளிகள் சரிந்து 57,156 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 311.50 புள்ளிகள் சரிந்து 17,016 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
காரணம்: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியதை அடுத்து டாலரின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு 113 ரூபாய் வரை அதிகரித்து வருவதால் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாணயங்களை மதிப்பு கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையை விட்டு வெளியேறுவது நீடித்து வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
நெஸ்லே
இந்துஸ்தான் யுனிலீவர்
இறக்கம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
டாடா ஸ்டீல்
மாருதி
மஹிந்திரா & மஹிந்திரா
என்டிபிசி
இண்டஸ்இண்ட் வங்கி
ஆக்சிஸ் வங்கி
டைட்டன்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் குறைந்து 81.47 ரூபாயாக உள்ளது.