Stock News: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
கடந்த வாரத்தைப் போல் அல்லாமல் இந்த வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரத்தைப் போல் அல்லாமல் இந்த வாரத்தின் தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 53.62 புள்ளிகள் அதிகரித்து 62,722 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி18.50 புள்ளிகள் அதிகரித்து 18,636 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள்:
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிப்பு, டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு உயர்வு , அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க உள்ளது போன்ற காரணங்கள் இந்திய பங்குச்சந்தை உயர காரணமாக அமைந்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வின் சமீபத்திய நாணயக் கொள்கை மறுஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகித அதிகரிப்பு வேகத்தை குறைப்பதாக முடிவெடுத்துள்ளதை பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரித்துள்ளனர்.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
டாடா ஸ்டீல்
டாக்டர் ரெட்டிஸ்
பஜாஜ் ஆட்டோ
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெசிஎல் டெக்
இன்ஃபோசிஸ்
டெக் மஹிந்திரா
பிபிசிஎல்
அப்பல்லோ மருத்துவமனை
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 81.64 ஆக உள்ளது.