Stock News: பங்குச்சந்தை 2-வது நாளாக சரிவுடன் தொடக்கம் - காரணம் என்ன?
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாயன்று (16-04-2024) தொடர்ந்து 2-வது நாளாக எதிர்மறையாக வர்த்தகத்தை பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செவ்வாயன்று (16-04-2024) தொடர்ந்து 2-வது நாளாக எதிர்மறையாக வர்த்தகத்தை பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத் தொடக்க நிலவரப்படி 533 புள்ளிகள் அல்லது 0.73% சரிவடைந்து 72,867 புள்ளிகளுடன் இருந்தது. அதே போல் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 145 புள்ளிகள் பின்னடைவு கண்டு 22,150 புள்ளிகளுடன் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் நிப்டி ஐடி மற்றும் நிப்டி பேங்க் குறியீடுகளும் சரிவு கண்டன. மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் மட்டும் இன்றைய தினம் 357 புள்ளிகள் ஏற்றம் கண்டு 45,524 புள்ளிகளுடன் உள்ளது.
சரிவுக்கான காரணங்கள்:
செவ்வாய்க்கிழமை (16-4-2024), பங்குச் சந்தையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட பல காரணங்கள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தினால் எண்ணெய் விலை உயரும் அச்சம், அமெரிக்க பணவீக்க விகிதத்தின் எதிர்மறை நிலை மற்றும் இந்தியத் தேர்தலுக்கு முந்தைய பதற்றங்கள் ஆகிய காரணங்களாலும் மத்திய கிழக்குப் பதற்றங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு சாத்தியங்களை நோக்கிச் செல்வதாலும் இன்று பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கின.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஓஎன்ஜிசி
ஜியோ பைனான்சியல்
எச்.டி.எஃப்.சி. வங்கி
இறக்கம் கண்ட பங்குகள்:
எல்டிஐ மைண்ட் ட்ரீ
என்.டி.பி.சி.
இன்ஃபோசிஸ்
பஜாஜ் பைனான்ஸ்
ஆக்சிஸ் பாங்க்
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 83.50 ஆக உள்ளது.