Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

Stock News: சரசரவென சரியும் சென்செக்ஸ் - நிஃப்டி PSB பங்குகள் புதிய உச்சம்!

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தகம் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் புதிய உச்சம் தொட்டுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Stock News: சரசரவென சரியும் சென்செக்ஸ் - நிஃப்டி PSB பங்குகள் புதிய உச்சம்!

Friday December 09, 2022 , 2 min Read

இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தகம் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் புதிய உச்சம் தொட்டுள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 171.97 புள்ளிகள் சரிந்து 62,364 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 54.05 புள்ளிகள் சரிந்து 18,554.85 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Stock

சரிவுக்கான காரணங்கள்:

பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிவை நோக்கி வர்த்தகமாகி வந்தாலும், பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது. பேங்க் அப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், இண்டஸ்இந்த் பேங்க், பெடரல் பேங்க் ஆகியவற்றின் பங்குகள் லாபத்துடன் விற்பனையாகி வருகிறது.

நேற்றை வர்த்தகத்தின் இறுதியில் பிஎஸ்பி பங்குகள் நல்ல லாபத்துடன் விற்பனையானதை அடுத்து, அதன் தாக்கம் காலையிலும் எதிரொலித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பிஎஸ்பி பங்குகள் 43,800 என்ற வரலாறு காணாத உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க வட்டி விகித உயர்வையும், சீனா கொரோனா பரவலையும் முதலீட்டாளர்கள் உற்றுநோக்கி வருவது பங்குச்சந்தையில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் மாணவர்கள் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து கொரோனா லாக்டவுனில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது கடந்த முறையைப் போலவே உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைய காரணமாக அமையலாம் என்றும், இதனால் பொருளாதார சீர்குலைவு வலுவடையும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் முதலீட்டாளர்களின் கவனம் பங்குச்சந்தையில் இருந்து தங்கத்தின் மீது திரும்பியுள்ளது.

ஏற்றம் கண்ட பங்குகள்:

டாடா ஸ்டீல்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ்

என்டிபிசி

ஐஷர் மோட்டார்ஸ்

இறக்கம் கண்ட பங்குகள்:

HCL டெக்னாலஜிஸ்

டெக் மஹிந்திரா,

எஸ்பிஐ லைஃப்

இன்ஃபோசிஸ்

ஆக்சிஸ் வங்கி

ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள்உயர்ந்து 82.19 ஆக உள்ளது.