Stock News: எழுச்சிக்குப் பின் தடுமாறும் இந்திய பங்குச் சந்தை!
உள்ளூர் முதலீட்டாளர்கள் காட்டிய முனைப்பால் எழுச்சி பெற்ற இந்திய பங்குச் சந்தை மீண்டும் தடுமாறத் தொடங்கியுள்ளது. இதற்கு சர்வதேசப் போக்குகளே காரணம்.
உள்ளூர் முதலீட்டாளர்கள் காட்டிய முனைப்பால் எழுச்சி பெற்ற இந்திய பங்குச் சந்தை மீண்டும் தடுமாறத் தொடங்கியுள்ளது. இதற்கு சர்வதேசப் போக்குகளே காரணம்.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 13) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 192.32 புள்ளிகள் உயர்ந்து 74,222.08 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 21.75 புள்ளிகள் உயர்ந்து 22,492.25 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் நிலவினாலும், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் தடுமாறத் தொடங்கியது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை அளித்துள்ளது.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 41.14 புள்ளிகள் (0.06%) சரிந்து 73,988.62 ஆகவும், நிஃப்டி 27.30 புள்ளிகள் (-0.12%) சரிந்து 22,443.20 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்காவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் வரிவிதிப்பு உள்ளிட்ட விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடையே குழப்பம் நீடித்து வருகிறது. அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் கலவையான போக்கு நிலவுகிறது. இந்தப் பின்னணியில் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை தடுமாற்றம் கண்டுள்ளது.

ஏற்றம் காணும் பங்குகள்:
எல் அண்ட் டி
எஸ்பிஐ
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
என்டிபிசி
ஆக்ஸிஸ் பேங்க்
மாருதி சுசுகி
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா ஸ்டீல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
சன் பார்மா
ஐடிசி
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
டைடன் கம்பெனி
நெஸ்லே இந்தியா
அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ்
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
விப்ரோ
பஜாஜ் ஃபைனான்ஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா குறைந்து ரூ.87.03 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan