Stock News: பங்குகளின் மதிப்பு உயர்ந்தது - முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்வை நோக்கி முன்னேற ஆரம்பித்துள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 369.10 புள்ளிகள் அதிகரித்து 56,961 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 115.85 புள்ளிகள் அதிகரித்து 16,974 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 குறியீடுகள் தலா 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. துறை ரீதியாக, நிஃப்டி மீடியா, நிஃப்டி மெட்டல், நிஃப்டி பிஎஸ்யு வங்கி 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை முன்னேறியுள்ளது.
காரணம்: பணவீக்கத்திற்கு எதிரான ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்க பொருளதாராம் மேலும் சரிவடையக்கூடும் என முதலீட்டாளர்கள் கணித்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல் வால் ஸ்ட்ரீட் பங்குச்சந்தையும் கணிசமான அளவு குறைந்து வந்தது.
இந்நிலையில், நிதி ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இங்கிலாந்து அரசாங்கப் பத்திரங்களை பேங்க் ஆஃப் இங்கிலாந்து வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்க மற்றும் ஆசிய பங்குச்சந்தைகள் காலை முதலே உயரத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம் காரணமாக இந்திய பங்குச்சந்தையின் மதிப்பும் உயரத்தொடங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
இண்டஸ்இண்ட் வங்கி
எம்&எம்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
சிப்லா
டிசிஎஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 35 காசுகள் உயர்ந்து 81.58 ரூபாயாக உள்ளது.