Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

‘சர்வைவர் தொடர்’ - மகளின் பசியை போக்க பிச்சை எடுத்த தாய்!

தனியார் அமைப்பால் மீண்ட குடும்பம்!

‘சர்வைவர் தொடர்’ - மகளின் பசியை போக்க பிச்சை எடுத்த தாய்!

Friday November 05, 2021 , 2 min Read

நான் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).


எனது மகளுடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா பாரதி நகரில் நான் வசிக்கிறேன். சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் தையல் தொழிலாளர்களாக வேலை செய்கிறேன். நான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். எங்களின் திருமணத்தை இரண்டு குடும்பங்களும் எதிர்த்தன. குடும்பங்கள் எங்களை ஆதரிக்கவில்லை என்றாலும், சுமுகமாக அதனை நிர்வகித்து வந்தோம்.


என்னை திருமணம் செய்வதற்கு முன்பு என் கணவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்தான். திருமணத்திற்குப் பிறகு, எங்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார், நாங்கள் நான்கு பேரும் சேலம் மாவட்டத்தில் ஒன்றாக வாழ்ந்தோம். என் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகே, எனது சொந்த கிராமமான பாரதி நகரில் சென்று வீடு கட்டி குடியிருக்கத் தொடங்கினோம்.


நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் எதிர்பாராதவிதமாக, என் கணவரும் என் மகனும் திடீரென சாலை விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். என் கணவர் இறந்த பிறகு, என் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறியது. மூன்று வயது குழந்தையுடன், எந்த ஆதரவும் இல்லாமல் மூன்று வேளை உணவுக்காக போராடிக்கொண்டிருந்தேன்.


இந்த நேரத்தில்தான், கிராமப்புற கல்வி மற்றும் செயல் மேம்பாட்டு குழு (ரீட்) குழு என்னை அடிக்கடி சந்தித்து, எனக்கு ஆலோசனை வழங்கியது. அந்த குழுவே வாழ்க்கையை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை எனக்கு ஏற்படுத்தியது.


பின்னர், மெதுவாக, நான் வீட்டை விட்டு வெளியே வந்து செயல்படத் தொடங்கினேன். அந்தக் குழுவின் உறுப்பினர்களில் நானும் ஒருவரானேன். பின்னர், சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

சர்வைவர் தொடர்

வேலைக்குச் செல்லும் சமயத்தில் எனது மகளை அங்குள்ள மையத்தில் விட்டுச் செல்வேன். நான் வேலை முடிந்து வீடு திரும்பும் வரை அவள் தொடர்ந்து மையத்தில்தான் இருப்பாள். போதுமான சம்பளத்துடன் மாதத்தின் தேவைகள் மற்றும் கடமைகளை ஓரளவு நிர்வகித்து வந்தநிலையில் தான் கொரோனா லாக்டவுன் வந்தது. இதனால் மீண்டும் சிக்கல், அப்போது எனது வாழ்வாதாரம் எனக்குக் கிடைத்த ஊதியத்தை சார்ந்தே இருந்தது என்பதால் தடுமாறினேன்.


கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்கத் தொடங்கினர். ஏனென்றால் அவர்களது குடும்பங்களும் அதே பிரச்சனையை எதிர்கொண்டன, ஆனால் என்னால் நிர்வகிக்க முடியவில்லை. அந்த தருணம் ரேஷன் கார்டு இல்லாத மதிப்பை உணர வைத்தது. ரேஷன் கார்டு இல்லாததால் அரசாங்கத்திடமிருந்து எந்த நன்மையும் பெற முடியவில்லை. இதனால், ஒருகட்டத்தில் என் மகள் பசியை தாங்க முடியாமல் அழுகத் தொடங்கினாள். 


நான் ஒரு உதவியற்ற தாயாக, என் மகளுக்கு பிச்சை எடுத்து உணவளித்துவிட்டு பல இரவுகளில் வெறும் வயிற்றில் தூங்கத் தொடங்கினேன். இப்போதும் எனக்கு ஆதரவளித்தது ரீட் அமைப்பு தான்.


அந்த சமயத்தில் எனக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து ஆதரித்தது மட்டுமில்லாமல், ரூ.2,000 பணம் கொடுத்தது. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, இப்போது வரை, நானும் என் மகளும் READ அமைப்பின் ஆதரவுடன் பிழைத்து வருகிறோம்," என்றுள்ளார்.