அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித் திட்டம் - தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!
அரசு தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலை சிற்றுண்டித் திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அனைத்து அரசுத் தொடக்கப்பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றியானர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காகிமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் பல கடினமான சுர்திருத்தங்களை மேற்கொண்டதன் விளைவாக திமுக அரசு பொறுப்பேற்ற போது இருந்த வருவாய் பற்றாக்குறையானது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்தது நடப்பு ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
துறை வாரியாக நிதியமைச்சர் அறிவித்த பட்ஜெட்டின் விவரங்கள் இதோ:
தமிழ் வளர்ச்சி பண்பாடு
- மொழிப்போர் தியாகி தாளமுத்து நடராசனின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
- அம்பேத்கரின் படைப்பை தமிழில் மொழிபெயர்க்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- தமிழ் கணினி பண்பாடு மாநாடு நடத்தப்படும்.
- 591 அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இலவச பயணப் பேருந்து.
- சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவுபடுத்தப்படும்.
- தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
- ரூ.223 கோடி நிதியில் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடு கட்டப்படும்.
- நாட்டுக்கற கலைகளை மேம்படுத்த நாட்டுப்புற கலை பயிற்சி
முன்னாள் படைவீரர்கள் நலன்
- போர் மற்றும் போர் சார்ந்த நேரங்களில் இன்னுயிர் துறக்கும் தமிழக வீரர்களுக்கான கருணைத் தொகை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
- வீர, தீர விருது பெறுபம் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை நான்கு மடங்காக அதிகரிக்கப்படுகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு
- 711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 லட்சம் தொழிலாளர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் ஆயிரம் படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டில் திறக்கப்படும்.
- ரூ.1020 கோடி செலவில் மதுரை, கோவை, கீழ்ப்பாக்கத்தில் கட்டப்படுத்து வரும் உயர் மருத்துவக் கட்டடங்களும் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்.
- ரூ. 147 கோடியில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றப்படும்.
- சுகாதாரத்துறைக்கு ரூ.18 ஆயிரத்து 661 கோடி நிதி ஒதுக்கீடு.
பள்ளிக் கல்வி
- அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
- அரசுப் பள்ளிகளில் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டு திட்டம் தொடக்கம்.
- ரூ.1,500 கோடி செலவில் புதிய வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்டப்படும்.
- எண்ணும் எழுத்தும் திட்டம் ரூ.110 கோடி மதிப்பீட்டில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம்.
- வரும் ஆண்டு சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படும்.
- ரூ.10 கோடி செலவில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக மற்றும் இலக்கியத் திருவிழா நடத்தப்படும்.
- ஆதிதிராவிடர், சீர்மரபினர், இந்துசமயஅறநிலைத்துறை உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும்.
- மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூன் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும். இந்த நூலுகத்தில் 3.50 லட்சம் நூல்கள் இருக்கும்.
- மாணவர்களுக்கு இலவச கைச்சிள் வழங்க ரூ.305 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்படும். 30 ஆயிரத்து 122 பள்ளிகளுக்கு விரிவாக்கப்படும், இத்திட்டத்திற்கு செலவாகும் ரூ.500 கோடியால் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
- பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு.
உயர்கல்வியும் திறன் மேம்பாடும்
- ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் உருவாக்கப்படும்.
- 54 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 2 ஆயிரத்து 783 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
- ரூ.120 கோடி நிதி செலவில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு உலகளாவிய புதுமை முயற்சிகள் மற்றும் திறன் பயிற்சி மையம் ( (TN-WISH) அமைக்கப்படும்.
- நான் முதல்வன் திட்டத்தில் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
- நான் முதல்வன் திட்டத்திற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
- இளைஞர்களுக்கு தொழிற்சாலைகளிலேயே பயிற்சி அளித்திட தொழில் நிறுகூனங்கள் ஊக்குவிக்கப்படும். தொழிற்சாலைகளில் திறன் பள்ளிகள் என்ற இத்திட்டத்திற்கு ரூ. 25 கோடி ரூபாய் வழங்கப்படும்.
- அரசின் குடிமைப்பணி பயிற்சிக்கு சேரும் ஆயிரம் மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு ரூ.7 ஆயிரம் உதவித்தொகை. முதல்நிலை தேர்ச்சி பெறுவோருக்கு ரூ. 25 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
- உயர்கல்வித்துறைக்கு ரூ. 6 ஆயிரத்து 967 கோடி நிதி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு
- சிஎம்டிஏ மூலம் சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் உருவாக்கப்படும்.
- ரூ.25 கோடி செலவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன்
- ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின் தொழில்துனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வண்ணம் வரும் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் முன்னோடிகள் திட்டம் ரூ. 100 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
- ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3 ஆயிரத்து 513 கோடி நிதி ஒதுக்கீடு.
மாற்றுத்திறன் மற்றும் மகளிர் நலன்
- கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிப்பு.
- மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்திற்கு ரூ. 1,444 கோடி நிதி ஒதுக்கீடு.
- புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
- ரூ.1000 உதவித்தொகை திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளின் சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க ரூ.30,000 கோடி நிதி ஒதுக்கீடு.
- ரூ. 2391 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி, ரூ.1,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி, ரூ.600 கோடி சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடிகளுக்கு என மொத்தம் ரூ.3 ஆயிரத்து 993 கோடி நிதி ஒதுக்கீடு.
விலங்குகளின் நலன்
- தெருநாய் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விலங்குகள் நலவாரியம் மூலம் ரூ.10 கோடி ஒதுக்கீட்டில் இன விருத்தி கட்டுப்பாட்டு மையம் செயல்படும்.
- அழிந்து வரும் உயிரினங்களை பாதுகாக்க தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் ஏற்படுத்தப்படும்.
- பறவைகளின் பாதுகாப்பை பேண, விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ. 25 கோடி செலவில் பன்நாட்டு பறவை மையம் மரக்காணத்தில் அமைக்கப்படும்.
- “காலநிலை மாற்ற வீராங்கணைகள்” என்கிற பெயரில் 500 மகளிர் சுய உதவிக்குழுவினர் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரூ. 20 கோடி செலவில் ஈ ஆட்டோக்கள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.