ChatGPT-யால் வேலை பறிபோகுமா? TCS அறிவிப்பால் நிம்மதியில் ஊழியர்கள்!
சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்களால் ஐடி வேலைகளுக்கு பாதிப்பு இருக்காது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
ChatGPT போன்ற ஏஐ தொழில்நுட்பங்களால் ஐடி வேலைகளுக்கு பாதிப்பு இருக்காது என டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் போன்ற காரணங்களால் ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய சாட்ஜிபிடி கோடிங் செய்யக்கூடியதாக இருப்பது ஐ.டி. ஊழியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நல்ல செய்தி ஃப்ரெஷ்கர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.
ChatGPT வருகையால் சிக்கலா?
மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலீடு செய்துள்ள
நிறுவனம் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற ஏஐ சாட்போட் ஒன்றை 2022 நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தியது.இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது கவிதை எழுதுவது முதல் புரோகிராம் கோடிங் செய்வது வரை அனைத்து விஷயங்களையும் செய்யக்கூடியது. இதனால் தங்களது வேலைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என ஐ.டி. நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
காரணம் சமீபகாலமாக செலவினங்களைக் குறைப்பதற்காக பணி நீக்க நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் செயற்கை நுண்ணறிவின் இந்த அபார வளர்ச்சி வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
புதிய கருவிகள் மற்றும் ChatGPT போன்ற புரட்சிகரமான தொழில்நுட்பங்களின் வருகையால், IT துறையில் பெரிய அளவில் வேலைகள் இழக்கப்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ChatGPT போன்ற தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு ஊழியர்களுக்கு சக பணியாளர் போல் செயல்படுமோ தவிர, பணி நீக்கத்திற்கு காரணமாக அமையாது எனத் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் சொன்ன நல்ல செய்தி:
ஏஐ தொழில்நுட்பம் ஐடி ஊழியர்களுக்கு துணையாக உதவிபுரியும் ஒரு சக ஊழியராக மட்டுமே இருக்குமே தவிர, ஐடி ஊழியர்களின் வேலைவாய்ப்பை பறிக்காது என டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள துறை தலைவர் மிலிண்ட் லக்காட் தெரிவித்துள்ளார்.
டிசிஎஸ் தலைமை மனித வள அதிகாரி (சிஎச்ஆர்ஓ) மிலிந்த் லக்காட் கூறுகையில்,
“இதுபோன்ற கருவிகள் உற்பத்தியை மேம்படுத்த உதவும். அதனால் நிறுவனங்களின் வணிக மாதிரியை பாதிக்கவோ மாற்றவோ முடியாது. செயற்கை நுண்ணறிவு வாடிக்கையாளரைப் புரிந்துகொள்ள, வேலைவாய்ப்பு என்பது தொழில்துறை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டது. எனவே, வேலைகளை தொடர்ந்து மனிதர்களே செய்வார்கள். அவர்களுக்கு ஏஐ போன்ற தொழில்நுட்பங்கள் ஒரு சக ஊழியராக உதவி மட்டுமே புரியும். உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், வேலையில் ஸ்திரத்தன்மை, நிர்வாகத்தின் தேவையை குறைத்தல் மற்றும் விரைவான விநியோகம் ஆகியவற்றிற்கு இவை பயனுள்ளதாக இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஏற்கனவே இதுபோன்ற சில கருவிகளைப் பயன்படுத்துகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவற்றின் செயல்திறன் குறித்து முழுமையான தெளிவு கிடைக்கும் என்று லக்கட் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எவ்வித எண்ணமும் இல்லை என்றும், ஊழியர்களுக்கு புரோமோஷன் மற்றும் ஊதிய உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கூகுளுக்கு போட்டியா? கேட்டதைக் கொடுக்கும், இணையத்தை கலக்கும் 'ChatGPT' பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!