Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி 4-வது ஆண்டாக அறிவிப்பு!

வெற்றியாளர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கு அதிகமான ரொக்கப் பரிசு; புத்தகங்களை வெளியிட வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் உடன் ஒப்பந்தம்.

அமேசான் நடத்தும் ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி 4-வது ஆண்டாக அறிவிப்பு!

Friday December 04, 2020 , 3 min Read

  • வெற்றியாளர்களுக்கு ரூ.20 லட்சத்திற்கு அதிகமான ரொக்கப் பரிசு;  புத்தகங்களை வெளியிட வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் உடன் ஒப்பந்தம்
  • போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்கை பயன்படுத்தி தங்களின் மின்னூல்களை சுயமாக வெளியிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.
  • போட்டியின் நடுவர்களாக சாரு நிவேதிதா, சி. சரவணகார்த்திகேயன், துர்ஜோய் தத்தா,  ஆனந்த் நீலகண்டன், அனு சிங் மற்றும் திவ்ய பிரகாஷ் துபே பங்கேற்கிறார்கள்

குறுவடிவு மற்றும் நீள்வடிவு எழுத்தாளர்களுக்கான ‘பென் டூ பப்ளிஷ்’ (Pen to Publish) என்னும் போட்டியை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. நான்காவது ஆண்டாக அமேசான் நிறுவனம் தனது இ-பப்ளிஷிங் இணையதளமான கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் (Kindle Direct Publishing) மூலம் இந்த போட்டியை நடத்த உள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் சுயமாக புத்தகங்களை வெளியிடுவோரின் எழுத்துத் திறனை அங்கீகரிக்கும்  விதமாக இந்த போட்டி நடைபெற உள்ளது.


விருப்பமுள்ள போட்டியாளர்கள் தங்களின் புதிய, இதுவரை வெளிவராத புத்தகங்களை 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வார்த்தைகளில் குறுகிய வடிவத்திலும் 10 ஆயிரத்திற்கு மேல் உள்ள வார்த்தைகளை நீண்ட உரைநடையிலும் கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங் இணையதளத்தில் வெளியிடலாம்.

அந்த புத்தகங்களின் தன்மை, படைப்பாற்றல், எழுத்து தரம் மற்றும் வாடிக்கையாளர் கருத்து உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில்  படைப்புகள் தேர்வு செய்யப்படும்.

இந்த ஆண்டிற்கான நடுவர் குழுவில் தமிழுக்கு சாரு நிவேதிதா, சி.சரவண கார்த்திகேயன்,  ஆங்கிலத்திற்கு துர்ஜோய் தத்தா, ஆனந்த் நீலகண்டன் மற்றும் இந்திக்கு அனு சிங் மற்றும் திவ்ய பிரகாஷ் துபே உள்ளிட்ட புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

1

ஒவ்வொரு மொழியிலும் குறுகிய மற்றும் நீண்ட உரைநடைக்கான போட்டிகள் நடைபெறும். இந்த 2 பிரிவுகளிலும் ஒவ்வொரு மொழியிலும் தலா 5 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து முதல் 3 பரிசுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


நீண்ட உரைநடை பிரிவில் ஒவ்வொரு மொழியிலும் முதலிடத்தை பிடிப்பவர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும் அந்தப் புத்தகத்தை வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

இந்த பிரிவில் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா 1 லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதேபோல் குறுகிய உரைநடை பிரிவில் முதலிடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். 

இதில் வெற்றிபெறும் எழுத்தாளர்களுக்கு குழு வழிகாட்டுதலையும் அவர்களின் வென்ற புத்தகங்களைச் சந்தைப்படுத்தும் உதவியையும் அமேசான்.இன் (Amazon.in) வழங்கும்.


‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி (KDP Pen to Publish) குறித்து தொழில்நுட்ப வல்லுனராக இருந்து எழுத்தாளராக மாறி முதலாம் ஆண்டு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சுதா நாயர் கூறுகையில், 

“கேடிபி-யின் பென் டூ பப்ளிஷ் போன்ற போட்டிகள் எழுத்தாளர்களுக்கு சுய வெளியீட்டிற்கான அனுபவத்தை அளிக்கிறது. மேலும் அதன் பல்வேறு நன்மைகளை விளக்குகிறது. நான் இந்த போட்டியில் பங்கேற்றபோது, எனது படைப்புகளை வெளியிடுவதும் குறித்தும், அதன் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருப்பது எவ்வளவு எளிது என்பது குறித்து அறிந்து கொண்டேன். இது தவிர, பல்வேறு மொழிகளில் நமது புத்தகங்களை எப்படி வெளியிடுவது என்பது குறித்து நான் அறிந்து கொண்டேன். மேலும் 70 சதவீதம் கவர்ச்சிகரமான ராயல்டி எனக்குக் கிடைத்ததால்,  அது எனக்கு எழுத்து மீதான ஆர்வத்தை தூண்டியது. இதன் மூலம் எனக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது என்று தெரிவித்தார்.

‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி (KDP Pen to Publish) குறித்து இந்தப் போட்டிக்கான நடுவரும் எழுத்தாளருமான சாரு நிவேதிதா கூறுகையில், எழுத்தாளர்களிடையே பிரபலமடைந்துள்ள  ‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி (KDP Pen to Publish) சமகாலத் தமிழ் இலக்கியத்திற்கு எப்படி  ஊக்கமளிக்கிறது  என்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. 


கேடிபி (KDP) போன்ற சுயபதிப்புச் சேவைகள் தமிழ் புத்தகங்களை உலகம் முழுவதும் உள்ள வாசகர்களிடம் மின்னூல்களாகச் சென்றடைய உதவி வருகின்றன. இந்த போட்டியின் மூலம் சில சுவாரஸ்யமூட்டும் படைப்புகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

 

kdp

‘பென் டூ பப்ளிஷ்’ போட்டி (KDP Pen to Publish) குறித்து கிண்டில் கன்டென்ட் – இந்தியாவின் இயக்குனர் அமோல் குர்வாரா கூறுகையில்,

“பென் டூ பப்ளிஷ் (KDP Pen to Publish)  போட்டி துவங்கிய நாளில் இருந்து அனைவரிடமும் மிகவும் பிரபலமடைந்துள்ளது. 3-ம் ஆண்டு போட்டியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள் பங்கற்றனர். போட்டியின் நான்காவது பதிப்பானது எழுத்து கலையை ஊக்குவிப்பதோடு எழுத்தாளர்களை வாசகர்களிடம் நெருக்கமாகக் கொண்டு செல்லும். 2 ஆயிரம் வார்த்தைகளை மட்டுமே கொண்ட குறுகிய உரை நடையானது அதிகமான எழுத்தாளர்களின் திறன்களை ஊக்குவிப்பதோடு அவர்களை சுய வெளியீட்டிற்கும் ஊக்கப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த போட்டியுடன் மூலம் புதிய திறமைகளைக் கண்டறிய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

 விருப்பமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் புத்தகத்தை Amazon.in-ல் சுயமாக வெளியிட kdp.amazon.com என்ற இணையதளத்தை 10 டிசம்பர் 2020 முதல் 10 மார்ச் 2021 வரை பதிப்பிக்கலாம். பின்னர் அவர்கள் தங்கள் புத்தகத்தை கேடிபி-யின் KDP Select பதிவுசெய்யலாம்.


மேலும் புத்தகத்தின் தகவல்களில் பென்டூபப்ளிஷ்4 (pentopublish4) என்ற குறிச்சொல் சேர்க்க  வேண்டும். போட்டிக்கான அனைத்து மின்னணு புத்தகங்களையும் ஐபோன்,  ஐபாட்,  ஆன்ட்ராய்ட் போன்களில் கிண்டில் இலவசச் செயலியிலும் டேப், பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களில் கிண்டில் இ-ரீடர்ஸ் மூலமும் படிக்கலாம். மேலும் விவரங்களுக்கு எழுத்தாளர்கள் www.amazon.in/pentopublish என்ற இணையதளத்தை பார்க்கவும்.