ஒரே ஆண்டில் 7 மில்லியன் போலி தயாரிப்புகளை அகற்றிய அமேசான்!
2020ம் ஆண்டிலிருந்து அமேசான் போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்றதாக 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
2020ம் ஆண்டிலிருந்து அமேசான் போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்றதாக 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமேசான் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு மட்டும் அதன் ஆன்லைன் சந்தையில் இருந்து 7 மில்லியனுக்கும் அதிகமான போலி தயாரிப்புகளை அப்புறப்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் போலி தயாரிப்புகள் வாடிக்கையாளர்களைச் சென்றவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக போலி தயாரிப்புகளை கண்டறியக்கூடிய இயந்திர கற்றல் விஞ்ஞானிகள், மென்பொருள் வல்லுநர்கள், புலனாய்வு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15,000க்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு பணி அமர்த்துவதற்காக 1.2 பில்லியனுக்கும் மேலாக முதலீடு செய்துள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டிலிருந்து அமேசானின் போலி குற்றவியல் பிரிவு 21,000க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குகள் மற்றும் சட்ட அமலாக்கத்துறைக்கு குற்றவியல் பரிந்துரைகளை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் பிராண்டுகள் மற்றும் சீன சட்ட அமலாக்கத்துறையுடன் ஒன்றிணைந்து போலி தயாரிப்புகள் தொடர்பான 50க்கும் மேற்பட்ட சோதனைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இதன் மூலமாக போலி பொருட்களை தயாரித்த உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள், விநியோகஸ்தர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்போது அமேசான் தனது ஆன்லைன் வர்த்தகத்தில் போலி தயாரிப்பாளர்கள் நுழைவதைத் தடுக்க முன்னதாகவே அரசால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகள், வரி செலுத்துவோர் விவரங்கள் மற்றும் வங்கித் தகவல்களை பரிசோதிக்க ஆரம்பித்துள்ளது. மேலும் லோகோ, பொருட்களின் வடிவம், வடிவமைப்பு ஆகியவை உண்மையானதா என்பதை கண்டறிய கம்ப்யூட்டர் புரோகிராம் மற்றும் ஸ்கேனிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.
போலி தயாரிப்புகள் அமேசான் நிறுவனம் மீதான அதன் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை சிதைக்கலாம் என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.