Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

129 காவல்துறை வீரர்களுக்கு 'அண்ணா பதக்கம்' - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காவல்துறை மற்றும் சீருடை பணியைச் சேர்ந்த 129 பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

129 காவல்துறை வீரர்களுக்கு 'அண்ணா பதக்கம்' - தமிழக அரசு அறிவிப்பு!

Saturday September 14, 2024 , 1 min Read

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காவல்துறை மற்றும் சீருடை பணியைச் சேர்ந்த 129 பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

CM

தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையில் செப் 15 ம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் முதல்வரின் அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பணியில் ஈடுபாடு மற்றும் அர்பணிப்புடன் செயல்பட்டை பாராட்டும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் 100 பணியாளர்கள், அலுவலர்கள், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் 10 பணியாளர்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்த துறைகளில் 10 பணியாளர்கள், ஊர்காவல படைகள் துறையில் 5 பணியாளர்கள் மற்றும் விரல் ரேகை பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கு இந்த ஆண்டு முதல்வரின் அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில், தீயணைப்பு துறையில் பணியாற்றி வரும் மந்திரமூர்த்தி மற்றும் ராமசந்திரன் ஆகியோர், கடந்த 2023 டிசம்பரில் வெள்ளத்தின் போது, மிகவும் சவாலான சூழலில் துணிச்சலுடன் படகு மூலம் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்ததற்காக தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த பதக்கங்கள் தமிழ்நாடு முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Edited by Induja Raghunathan