பட்ஜெட் 2020: ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதியமைச்சர் அறிவித்துள்ளது என்ன?
இந்தியப் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட் முக்கியமானதாக இருக்கிறது.
நாடே எதிர்பார்க்கும் முக்கிய அம்சம் பொது பட்ஜெட். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது, இதற்கு முக்கியமான காரணங்கள் நுகர்வோர் சந்திக்கும் விலைஉயர்வு மற்றும் குறைவான வரி வசூல். இதனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2வது மத்திய பட்ஜெட்டை எப்படி தாக்கல் செய்யப்போகிறார், இந்த பட்ஜெட் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லுமா என்று விவாதிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற்ததில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் வருகிற நிதியாண்டில் 6-6.5 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024ல் இந்தியப் பொருளாதாரம் 325 லட்சம் கோடியாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் விவசாயம், உற்பத்தித் துறைக்கு ஊக்கம் தருவது போல நாட்டை டிஜிட்டல் முறையில் முன்னேற்றம் அடைந்த சமூகமாக மாற்ற அரசு ‘டிஜிட்டல் இந்தியா’ மற்றும் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ இரண்டையும் நோக்கமாக வைத்து செயல்படுகிறது.
எது எப்படி இருப்பினும் வரி வசூல் இலக்கை அடையவில்லை, நுகர்வு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் பட்ஜெட்டி தயாரிப்பதற்கான உண்மையில் சாதகமான பின்னணி அமையவில்லை.
பொருளாதாரத்தின் முக்கிய திறவுகோலான நுகர்வுக் கலாச்சாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. பொருளாதாரம் அதிக நிதிப் பற்றாக்குறையைக் காணக்கூடும் என்ற அச்சம், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
2020ம் ஆண்டு தொழில் முனைவோர் ஆர்வத்தை கட்டவிழ்த்துவிடுவது, நிதி அல்லது முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் நாட்டில் வணிகத்தை எளிதாக்குவதற்கான சூழலை மேம்படுத்துவது மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சரின் முக்கியப் பணியாக இருக்கிறது.
நுகர்வோர் உணர்வுகளுக்கு ஊக்கமளித்தல்
இந்த ஆண்டின் யூனியன் பட்ஜெட்டின் முக்கிய அம்சம் நுகர்வோர் செலவு உணர்வை உயர்த்துவதாகும் - இது வருமான வரியைக் குறைக்கும் வடிவத்தில் இருந்தாலும் அல்லது பல்வேறு நுகர்வுப் பொருட்களின் விகிதங்களைக் குறைப்பதிலும் இருக்கும். இது பொருளாதாரத்தில் ஒரு முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் ஃபின்டெக் மற்றும் மின்வணிகம் போன்ற புதிய துறைகளுக்கு நம்பிக்கையளிக்கும். இதன் மூலம் வங்கிகள் கடன் அளிக்கும் சூழல் அதிகரிக்கும், யுபிஐ வடிவத்திலான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மூலம் நாட்டின் நிதிக்கு ஊக்கம் கிடைக்கும்.
ஃபின்டெக் ஸ்டார்ட் அப்பான அவெல் ஃபினான்ஸ், நிறுவனர் அங்குஷ் அகர்வால் கூறுகையில்,
"ஃபிண்டெக் தொழில் நிதி சேவைகளை ஊடுருவுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, நாடு முழுவதும் நிதி வலுவூட்டலை செயல்படுத்த அரசாங்கத்தின் முன்னுரிமையாக இருப்பது டிஜிட்டல்மயமாக்கல். 2020ம் ஆண்டு பொது பட்ஜெட் 2020 செயல்பாட்டு மூலதன தடைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும், சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அதிகக் கடன் ஊடுருவல் ஆகியவை ஒரு பரந்த சுற்றுச்சூழல் அமைப்பை எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
”மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் மின்வணிகத் தொழிலுக்கு ஏற்ற கொள்கை அம்சங்களைப் பற்றி பேச வாய்ப்பில்லை, ஆனால் இது நுகர்வோரின் வாங்கும் திறனை மேம்படுத்துவதில் பூஸ்டர் ஷாட்டை வழங்க முடியும். இணையவழி நிறுவனங்களுக்கும் ஆஃப்லைன் வணிகர்களுக்கும் இடையே போட்டி இருந்தபோதிலும், அதிக பணம் நுகர்வோரின் கைகளில் வைப்பதே முக்கியமாகும், இது இரு பிரிவுகளுக்கும் உதவும் என்கிறார்.
முதலீட்டுப் பாதை
வாகிஹாவின், இணை நிறுவனர், சித்தார்த் ஜெயின் கூறுகையில், நுகர்வோருக்கான ஊக்கியே இந்திய பொருளாதாரத்தின் அவசரத் தேவையாக இருக்கிறது. பட்ஜெட்டில் அதற்கான அம்சங்கள் இருந்தால் நுகர்வோர் செலவுகளில் உடனடி உயர்வைக் காண முடியும் ஸ்டார்ட் அப் சூழலில் முதலீடுகள் ஆளும் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது, இதனால் அதனை மேலும் திடமாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய மென்பொருள் தயாரிப்பு தொழில் வட்ட அட்டவணை (iSPIRT) பல நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது, அதன் மூலம் ஸ்டார்ட்அப்களுக்கான மூலதன வருவாயை அனுமதிக்கும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க முடியும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சம், ESOPகளில் வரிவிதிப்பு கட்டமைப்பு மற்றும் ஏஞ்சல் வரியைச் சுற்றியுள்ள சிக்கல்கள் ஆகியவற்றின் வடிவத்தில் சிலவற்றை அகற்றுவதாகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பிரதான பொருளாதாரத்துடன் ஒருங்கிணைக்கத் தொடங்குகையில், அவை ஏற்கனவே சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) பலன்களை உணரத் தொடங்கி இருக்கின்றன.
ஜி.எஸ்.டி-யில் ஏற்கனவே சில விதிமுறைகள் உள்ளன, அவை தொடக்கங்களின் மூலதனத்தைத் தடுத்துள்ளன, இதற்கு அவசர தீர்வு தேவைப்படலாம். தற்போதைய அரசாங்கம் தூய்மையான சூழலை உருவாக்குவதில் பெரும் உந்துதலைக் கொண்டுள்ளது, எனவே மின்சார வாகனங்கள் (ஈ.வி) பிரிவில் வலுவான கவனம் செலுத்தப்படுகிறது.
எலக்ட்ரானிக் வாகனங்கள்
எலக்ட்ரானிக் வாகனங்களின் பயன்பாட்டை பிரபலப்படுத்தும் விதமாக ஏற்கனவே நாடு தழுவிய சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதையும் வாங்குவதையும் ஊக்குவிப்பதற்காக வரி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
"ஆட்டோமொபைல் துறையின் மறுமலர்ச்சி பட்ஜெட் அமர்வில் முன்னுரிமை பட்டியலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த சந்தை உணர்வு மற்றும் பிஎஸ் VI உமிழ்வுத் தரங்களுக்கு மாறுதல் ஆகியவை கடந்த ஆண்டு தொழில்துறையின் மந்தநிலைக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன,” என்கிறார் ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனர் மற்றும் எம்.டி., ஜீதெந்தர் சர்மா.
மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை அரசாங்கம் வழங்கினால் இந்தியாவில் நிச்சயம் EV புரட்சிக்கு வித்திடும். இருப்பினும், பாகங்களின் விலை மற்றும் இறக்குமதி வரி EV உற்பத்தியாளர்களுக்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது. உற்பத்தி வசதிகள் இல்லாததால் தயாரிப்புகளின் சில பகுதிகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகின்றன, இது ஒட்டுமொத்த தயாரிப்பு செலவில் ஒரு முக்கிய பகுதியாகும்,”என்று அவர் கூறுகிறார்.
யூனியன் பட்ஜெட்டில் ஒட்டுமொத்தமாக இந்திய பொருளாதாரத்திற்கு புதிய வரையறைகளை அமைக்க முடியும், குறிப்பாக தொடக்க நிறுவனங்கள், வளர்ச்சியின் இயந்திரங்களை புதுப்பிக்கக்கூடிய நடவடிக்கைகள் இருக்கும்.