'வளர்ச்சியின் புதிய பாதையை வழங்கும் பட்ஜெட்' - பிரதமர் மோடி புகழாரம்!
உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
பட்ஜெட் 2024-25 இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் வளர்ச்சியின் புதிய பாதையை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
"மத்திய பட்ஜெட்; இளைஞர்கள், பின்தங்கிய பிரிவினர், பெண்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் கவனம் செலுத்துவதாகவும், வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டங்கள் கோடிக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும்," என்றும் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
![Modi](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/modi1-1721735424987.jpg?fm=png&auto=format&w=800)
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான பட்ஜெட். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடையும் பயணத்திற்கு புதிய பட்ஜெட் துணை நிற்கும், என்று மோடி தெரிவித்தார். மேலும், பேசுகையில்,
"500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி தரும் திட்டம். முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுளள்தால் பெண்கள் பயனடைவர்," என்றார்.
வீட்டுக்கொரு தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலான அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன. கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.
இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற புதிய பட்ஜெட் வழிவகுக்கும். பழங்குடி சமூகம், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான திட்டங்களை பட்ஜெட் கொண்டு வந்துள்ளது. இந்த பட்ஜெட் பெண்களின் பொருளாதார பங்கேற்பை உறுதிப்படுத்துகிறது.
இந்த பட்ஜெட் நமது புதிய நடுத்தர வர்க்கத்தின் விருப்பங்களை உற்சாகப்படுத்துவதோடு நம் இளைய தலைமுறைக்கு இதுவரை இல்லாத வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது, என்றார் மோடி.