நிதி நெருக்கடி; 200 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த Waycool Foods!
நிதி நெருக்கடியை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தை ஒத்திவைத்துள்ளது. தற்போது ஊழியர்களின் ஜூன் மாத ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது Waycool foods.
சென்னையைச் சேர்ந்த வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான 'Waycool foods' நிறுவனம், நிதி நெருக்கடிகள், பெருகிவரும் நஷ்டங்களுக்கு மத்தியில் சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது, லாப நோக்கத்தைக் கருத்தில் கொண்டு கட்டமைப்புகளை எளிமைப்படுத்தவும் தானியங்கி செயல்திறனுக்கு மாறுவதற்கும் இந்த ஆட்குறைப்பு என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையே என்று வேகூல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வேகூல் ஃபுட்ஸ் இந்தியாவின் முன்னணி ஃபுட் டெக் மற்றும் அக்ரிடெக் நிறுவனமாகும். ஊடக செய்தி அறிக்கைகளின்படி, இந்நிறுவனம் முன்னர் ஊழியர்களின் சம்பளத்தை ஒத்திவைத்துள்ளது, ஊழியர்களின் ஜூன் மாத ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, நிறுவனத்தின் நிதி ஆதாரம் குறைந்துள்ளது மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை பலதரப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.
மேலும், SGS போன்ற சேவை வழங்குனர்கள் பலருக்கும் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகைகளினால் நிலைமை மோசமடைந்துள்ளது. எனினும், நிறுவனம் தற்போது அடுத்த சுற்று முதலீடுகள் வருவதற்கு முன்பாக குறுகிய கால நிதிகளைப் பெற்று வருவதாகவும் இதில் 75% நிதி ஆதாரங்களைப் பெற்றுவிட்டதாகவும் ஆகஸ்ட் மாதம் இந்த நிதி திரட்டல் சுற்று முடிவுக்கு வரும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு ஆண்டிற்குள் வேகூல் மூன்று சுற்றுப் பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளது. அறிக்கைகளின்படி, வேகூல் பிப்ரவரியில் சுமார் 70 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததோடு நிறுவனத்தின் சில கிடங்குகளையும் மூடியது குறிப்பிடத்தக்கது.