Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவன் சாதனை: முதல் முயற்சியிலேயே அசத்தல்!

சென்னையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவனான சுந்தரராஜன் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 503 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவன் சாதனை: முதல் முயற்சியிலேயே அசத்தல்!

Tuesday September 13, 2022 , 2 min Read

சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனான சுந்தரராஜன் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 503 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

இந்த ஆண்டு அகில இந்திய அளவில் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 மாணவ, மாணவிகள் நீட் தேர்வெழுதியுள்ளனர். தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பின் அறிவிப்பின் படி, தேர்வெழுதிய மாணவர்களில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 069 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேரில், 67 ஆயிரத்து 787 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சரிந்துள்ளது.

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர் கதையாகி வந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவனான சுந்தரராஜன் படைத்துள்ள சாதனை அனைவருக்கும் முன்மாதியாக அமைந்துள்ளது.

Student

முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி

சென்னை குரோம்பேட்டையில் உள்ள அக்கீஸ்வரர் காலனியைச் சேர்ந்த பாலாஜி - ஜெயலட்சுமி தம்பதியின் இரண்டாவது மகன் சுந்தரராஜன். பிரிண்டிங் பிரஸ் நடத்தி வரும் பாலாஜிக்கு மேலும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 17 வயதான சுந்தரராஜன் குரோம்பேட்டையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்துள்ளார்.

பொதுத் தேர்வில், 576 மதிப்பெண்கள் பெற்று, செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சுந்தரராஜனுக்கு சின்ன வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அவரது பெற்றோரும் மகன் மருத்துவராக வர வேண்டும் என்ற ஆசையுடன் படிக்கவைத்துள்ளனர்.

எனவே, டாக்டர் கனவை நனவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நீட் தேர்வுக்கு முயன்று வந்த சுந்தரராஜன், எந்தவிதமான தனியார் கோச்சிங் சென்டருக்கும் செல்லாமல், தானே முழு முயற்சியுடன் பயிற்சி செய்துள்ளார். இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,

“கொரோனா லாக்டவுனின் போது வீட்டிலிருந்து படிக்க நிறைய நேரம் கிடைத்தது. எனவே பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தேன். தற்போது அதன் பலனாக முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். இதனால் அரசுப் பள்ளியில் படிப்பவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது,” எனத் தெரிவித்துள்ளார்.
Student

சுந்தரராஜனின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பிற்கு பலனாக நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே 503 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சுந்தரராஜனின் மூத்த சகோதரர் இயற்பியல் துறையில் படித்து வருவதால் இயற்பியல் பாடப்பிரிவில் தனது தம்பி நீட் தேர்வுக்கு தயாராக தேவையானவற்றை அவரே கற்றுக்கொடுத்துள்ளார்.

பயிற்சி மையத்திற்குச் செல்லாமலேயே நீட் தேர்வில் 503 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ள சுந்தரராஜன், நீட் தேர்வை கண்டு அச்சப்படாமல் தன்னம்பிக்கையுடன் படித்தால் தேர்ச்சி பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.