'நிதித்துறை சூழலுக்கு சென்னை சிறந்த இடமாக விளங்குகிறது' - தமிழ்நாடு ஸ்டோரி நிகழ்ச்சியில் M2P இணை நிறுவனர் மதுசூதனன் பெருமிதம்!
இந்திய நிதிநுட்பத்துறையை உலகின் பல்வேறு சந்தைகள் நோக்குவதாகவும், நிதிநுட்பத்துறையின் இந்தியாவின் சாம்பியன்களாக விளங்குவதாகவும் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டோரி நிகழ்ச்சியில் பேசும் போது எம்2பி ஃபின்டெக் நிதிநுட்ப நிறுவனர் மதுசூதனன் கூறினார்.
இந்திய நிதிநுட்பத்துறையை உலகின் பல்வேறு சந்தைகள் நோக்குவதாகவும், நிதிநுட்பத்துறையின் இந்தியாவின் சாம்பியன்களாக விளங்குவதாகவும் சென்னையில் யுவர்ஸ்டோரி நடத்திய 'தமிழ்நாடு ஸ்டோரி' நிகழ்ச்சியில் பேசும் போது எம்2பி ஃபின்டெக் நிதிநுட்ப நிறுவனர் மதுசூதனன் கூறினார்.
தமிழக ஸ்டார்ட் அப் சூழலின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கதையை கொண்டாடும் வகையில், யுவர்ஸ்டோரி சார்பில் சென்னையில் இன்று தமிழ்நாடு ஸ்டோரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பத்தாண்டு பயணம்
இந்த நிகழ்ச்சியில், யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. ஷ்ரத்தா சர்மா, சென்னையைச் சேர்ந்த நிதி நுட்ப நிறுவனம் '
Fintech' நிறுவனர் மதுசூதனுடன் உரையாடினார்.ஷ்ரத்தா சர்மா கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மதுசூதன் தனது நிறுவனம் பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டார்.
நானும், எனது நண்பரும் மும்பையில் இருந்த போது, டீ குடித்தபடி அடிக்கடி எதிர்காலம் பற்றி பேசிக்கொண்டிருப்போம். அதன் பிறகு, சென்னை திரும்பி நிதி நுட்ப நிறுவனத்தை துவக்க முயற்சித்தோம். இப்போது நிதி நுட்பத்துறை பிரபலமாக உள்ளது. ஆனால், நாங்கள் முயற்சித்த போது ஃபின்டெக் உள்கட்டமைப்பு என்பதே பலருக்கு புரியவில்லை.
"முதலீடு கிடைக்காமல் நாங்களே சுய நிதியில் துவங்கினோம். ஐந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டு தாக்குப்பிடித்தோம். தொழிலில் நீங்கள் முதலீட்டை நாடாமல், நிறுவனத்தை நடத்தினால் மூலதனம் உங்களை தேடி வரும். அதன் பிறகு, நிதி பெற்றோம்."
800 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நிதி நுட்ப உள்கட்டமைப்பு சேவை வழங்கு வருகிறோம். வங்கிளுக்கு தேவையான மென்பொருள் அளிக்கிறோம். நிதி நுட்ப நிறுவனங்கள் வங்கிகளுடன் இணைந்து செயல்பட தேவையான காலத்தை குறைத்திருக்கிறோம், என்றார்.
சென்னை சூழல்
சென்னையின் நிதிநுட்ப சூழல் தொடர்பாக ஷ்ரத்தா சர்மா அடுத்த கேள்வி எழுப்பினார்.
"ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை சென்னை பெற்றிருந்தது போல, நிதிநுட்பத்துறை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை சென்னை பெற்றுள்ளது என மதுசூதன் கூறினார். சிட்டி பேங்க் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் சென்னையில் நீண்ட காலம் முன்னரே செயல்பட்டு வந்தன. பன்னாட்டு நிறுவனங்களும் சென்னையில் கிளைகள் கொண்டிருந்தன. பெரிய வர்த்தகங்களும் சென்னையில் இருந்தன. இவை எல்லாம் சேர்த்து நிதி நுட்ப சூழலை உருவாக்கின," என்றார்.
நிதி நுட்ப சூழலை பொருத்தவரை சென்னையின் சாதகமான அம்சம் என்ன என ஷ்ரத்தா சர்மா கேட்ட போது, ஊழியர்களின் ஆதரவு என்று பதிலளித்தார். தனது நிறுவனத்திலேயே தொடக்கத்தில் சேர்ந்த 50 ஊழியர்களில் ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் தொடர்ந்து தங்களுடன் நிறுவனத்திலேயே இருப்பதாகக் கூறினார். சென்னை நேர்நிறையான விதத்தில் கன்சர்வேட்டிவ் தன்மை கொண்டது என்றவர் அனைவரையும் உள்ளடக்கிய நகரம் என்றும் கூறினார்.
சென்னையில் நிதி நுட்பத்துறையில் நிறுவனங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் தொடர்பான கேள்விக்கு, இங்கு நெருக்கமான சூழல் இருப்பதாகவும், நிறுவனர்கள் பரஸ்பரம் உதவி கோரி, உதவி செய்வதும் முக்கிய அம்சம், என்றார்.
அண்மை காலமாக ஸ்டார்ட் அப்கள் நிதி திரட்ட கடினமான நிலை இருப்பதை குறிப்பிட்டு, நிறுவனர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள் என ஷ்ரத்தா சர்மா கேட்டதற்கு,
"சிக்கனமாக இருங்கள், எளிமையாக இருங்கள், செலவை கட்டுப்படுத்துங்கள் என்று மதுசூதன் கூறினார். நிறுவனங்களுக்கு நல்ல கலாச்சாரம் தேவை என்றும் கூறினார்."
மற்ற நகரங்களுக்கும் சென்னைக்குமான வேறுபாடு பற்றிய கேள்விக்கு, நாங்கள் பொதுவாக எங்களை மார்க்கெட்டிங் செய்து கொள்வதை விரும்புவதில்லை என்றும், செய்வது பற்றி பெருமிதம் அடித்துக்கொள்வதில்லை, என்றார்.
இந்திய எதிர்காலம்
நிதி நுட்பத்துறையின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட போது, மிகவும் உற்சாகமாக பதில் அளித்தார் மதுசூதனன்.
"இந்தியா நிதி நுட்ப சேவைகளை அளிக்கிறது. உலகின் பல சந்தைகள் நம்மை நோக்குகின்றன. இந்தியாவில் கூகுள் போன்ற நிறுவனம் இல்லை என்பதற்கு பதிலாக நிதிநுட்பத்துறை அமைகிறது. நிறைய சேவைகளை உருவாக்கி வருகிறோம். இந்தியாவின் சாம்பியனாக நிதி நுட்பத்துறையினர் விளங்குகிறோம், "என்று தெரிவித்தார்.
அரசு கொள்கை தொடர்பான எதிர்பார்ப்பை பொருத்தவரை, கட்டுப்பாடு விதிகளை எளிமையாக்க வேண்டும் என்றார். அதே நேரத்தில், ஒரு துறையாக இணைந்து அரசிடம் கோரிக்கைகளை கொண்டு செல்வதில் சென்னை சற்று மேம்பட வேண்டும் என்றார்.
Edited by Induja Raghunathan