சென்னை ஸ்டார்ட்-அப் ‘Agnikul’ இஸ்ரோ தலைவர் தலைமையில் ஏவுதளம் துவக்கம்!
விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான அக்னிகுல் காஸ்மோஸ், இந்தியாவில் தனியாரால் வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்படும் முதல் ஏவுதளத்தை (launchpad) துவக்கி வைத்துள்ளது.
விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பான 'அக்னிகுல் காஸ்மோஸ்', இந்தியாவில் தனியாரால் வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்படும் முதல் ஏவுதளத்தை (launchpad) துவக்கி வைத்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்த ஏவுதளம், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்தால் துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இஸ்ரோ மைய இயக்குனர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஏவுதளம், இஸ்ரோ மற்றும் இன்–ஸ்பேஸ் (IN-SPACe) ஆதரவுடன் அக்னிகுல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது அக்னிகுல் ஏவுதளம் (ALP) மற்றும் அக்னிகுல் மிஷன் கண்ட்ரோல் மையம் (AMCC) ஆகிய இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் முக்கிய அமைப்புகள் அனைத்தும், பரஸ்பரம் நான்கு கிமீ தொலைவில் உள்ளவை, கவுண்டவுன் போது 100 சதவீத செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஏவுதளம், திரவ நிலை வாகனங்கள் செலுத்தும் வசதிக்கு உதவுவதை குறிப்பாக மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ராக்கெட் செலுத்தப்படும் போது, முக்கிய அம்சங்களைக் கண்காணிப்பதற்குத் தேவையான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேவை எனில் இஸ்ரோ கட்டுப்பாடு மையத்துடன் தரவுகள் மற்றும் இதர முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அக்னிகுல் திட்டமிட்டுள்ள ராக்கெட் செயல்பாடுகள் இங்கிருந்து மேற்கொள்ளப்பட உள்ளன.
Edited by Induja Raghunathan