கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள 10 இந்திய மாவட்டங்கள் இவை தான்...
இந்தியாவின் மொத்த கொரோனா தாக்கத்தில் 54.47% இந்த 10 நகரங்களில் இருந்து வந்துள்ளவை என தெரியவந்துள்ளது.
இந்தியா முழுதும் கடந்த 6 நாட்களில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை சுமார் 1 லட்சம் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் வரை கொரோனா பாசிட்டிவ் மொத்த எண்ணிக்கை 5 லட்சம் ஆகியுள்ளது. கடந்த எட்டு நாட்களாக இந்தியாவில் தினத்துக்கு 14 ஆயிரம் கேஸ்கள் பதிவாகிவருவது.
இதன்படி, இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் 4வது இடத்தில் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் இதுவரை சுமார் 4.89 லட்சம் மக்கள் இந்த பாண்டமிக்கிற்கு உயிரிழந்துள்ளனர். 96.04 லட்சம் மக்கள் இக்கொடிய கொரோனாவால் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 5 லட்சம் பாசிட்டிவ் கொரோனா கேஸ்களில், 10 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மட்டும் கோவிட் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
“டெல்லி, சென்னை, தானே, மும்பை, பால்கர், பூனே, ஹைதராபாத், ரங்கா ரெட்டி, அகமதாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய 10 இந்திய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மட்டும் இந்தியாவின் மொத்த கோவிட் எண்ணிக்கையில் 54.47% கோவிட் கேஸ்களின் பங்களிப்பு இருக்கிறது.”
கடந்த மாதம் முதல் இடத்தில் இருந்த மும்பையை, டெல்லி தற்போது அடைந்துள்ளது. தலைநகரில் கொரோனா தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை அங்கு 77,240 கோவிட் கேஸ்கள் பதிவாகியுள்ளது, 2492 இறப்புகள் ஏற்பட்டுள்ளது.
மஹராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கோவிட் பாதிப்பு அதிகமாக இருந்து வந்தாலும் நாட்டில் இரண்டாவது அதிகம் பாதித்த மாநிலமாக தற்போது இருக்கிறது. இதுவரை 1,52,765 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 7106 இறப்புகள் பதிவாகியுள்ளது.
மஹராஷ்டிராவில் பாசிட்டிவ் சதவீதம் 17.52% என்றும், இறப்பு விகிதம் 4.65% இருக்கிறது.
தமிழ்நாடு இந்திய பட்டியலில் 4ம் இடத்தில் மொத்த கொரோனா எண்ணிக்கை 78,335 ஆகவும், இறப்புகள் 1025 ஆக பதிவாகி இருக்கிறது.
நாட்டிலே மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களான டெல்லி, குஜராத், தமிழ்நாடு மற்றும் மஹராஷ்டிராவுக்கு கோவிட்-19 தொற்று சிகிச்சைக்கான மருந்து Remdesivir-ன் முதல் பேட்ச் விரைவில் வரவிருக்கிறது.