’கைப்பேசி இல்லா ஒரு நாள்’- 100 ஜோடி இரட்டையர்கள் கொண்டாட்டம்!
இன்று மாசுபட்ட காற்றை சுவாசித்துக்கூட நம்மால் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால் கைப்பேசி இன்றி நம்மால் ஒரு நாளைக்கூட எளிதாகக் கடந்துவிட முடியாது.
இன்று மாசுபட்ட காற்றை சுவாசித்துக்கூட நம்மால் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால் கைப்பேசி இன்றி நம்மால் ஒரு நாளைக்கூட எளிதாகக் கடந்துவிட முடியாது. பெற்றோர் குழந்தைகள் இடையேயான உறவு வலுப்பட பெற்றோர்கள் தரமான நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவது அவசியம்.
இதனை உணர்த்தும் வகையில் குழந்தைகள் தினத்தன்று பெற்றோர் தங்களது கைப்பேசிகளை அணைத்துவிட்டு குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவிடவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் எஸ். கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
குழந்தைகளுடன் பெற்றோர் ஒரு மணி நேரம் செலவிடுவதற்கு சட்டம் இயற்றப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதையும் சாதனங்கள் நம் வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்திது நம்மை ஆட்டிப்படைப்பதையும் இது உணர்த்துகிறது.
இந்நிலையில் சென்னையில் உள்ள முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 100 ஜோடி இரட்டையளர்கள் உடன் இணைந்து ‘கைப்பேசி இல்லா ஒரு நாள்’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் தேர்வுக் குழு இயக்குனர் அருண் மற்றும் அரவிந்த் கலந்துகொண்டனர். இரட்டையர்களான இவர்கள் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து குழந்தைகளிடையே உரையாற்றினர்.
நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100 ஜோடி இரட்டையர்கள் கலந்துகொண்டனர். இதில் ஒவேஷன் ஹிட்ஸ் மேளாவில் பரிசு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மனதை மயக்கும் வகையில் அமைந்திருந்த இரட்டையர்களின் நடன நிகழ்ச்சி, பொம்மலாட்டம் போன்றவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதற்கு முன்பும் இந்தப் பள்ளியில் இதேபோன்று இரட்டையர்கள் ஒரே மாதிரியான உடையணிந்து கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.