'மின்சார வாகனத்திற்கு மாறுவது என்பது தனியார்- பொதுத்துறையின் இணைந்த பொறுப்பாகும்' - E-Daddy யாஸ்மின் ஜவஹரலி!
தமிழ்நாடு ஸ்டோரி 2024 நிகழ்வில் யாஸ்மின் ஜவஹரலி இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி அலசினார்
மின்சார வாகனத்திற்கு மக்கள் மாறும் அளவுக்கு அந்த வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் உள்கட்டமைப்பு வளர்ச்சியடையவில்லை, என்று E Daddy குழுமத்தின் மூத்த நிர்வாக இயக்குநர் யாஸ்மின் ஜவஹரலி யுவர்ஸ்டோரியின் Tamil Nadu Story 2024 நிகழ்வில் கூறினார்.
தமிழ்நாடு ஸ்டோரி 2024 நிகழ்வில் யாஸ்மின் ஜவஹரலி இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி அலசினார்.
இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டிற்கு மாறுவதற்கான வாய்ப்புகள், குறைபாடுகள் மற்றும் எதிர்காலம் பற்றிப் பேசிய ஜவஹரலி, மின் வாகனத்திற்கான மாற்றம் ஏற்பட அழுத்தம் கொடுப்பது ஒரு கூட்டுப் பொறுப்பு என்று வலியுறுத்தினார். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மிகவும் சாத்தியமான தீர்வு மின்வாகனங்களே. மின்சார வாகனத்திற்கு மாறுதல் என்பது தனியார் மற்றும் பொதுத் துறையின் கூட்டுப் பொறுப்பாகும், என்றார்.
![Taminadu Story 2024](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/tnstory-1721559919073.jpg?fm=png&auto=format&w=800)
மின்சாரத் தீர்வுகள் இதுவரை..
இந்தியாவில் பசுமை இயக்கத் தீர்வுகள், EV-கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது, இதன் விற்பனை 1.7 மில்லியனைத் தொட்டுள்ளது. EV பயணிகள் கார்களின் வருடாந்திர விற்பனை 80% உயர்வு கண்டுள்ளது.
யாஸ்மின்ன் ஜவஹரலி இந்த வளர்ச்சிக்கு மூன்று காரணங்களைக் கூறினார்:
"சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலையான எரிபொருள் தேவையை வலியுறுத்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; நிலையான இயக்கம் மற்றும் தீர்வுகளை பின்பற்றுவதற்கான ஒழுங்குமுறை உந்துதல். இருப்பினும், தேவை அதிகரிப்பதால், சவாலும் உயர்கிறது," என்றார்.
சவால்கள்:
தேவைக்கும் தேவையைப் பூர்த்தி செய்யும் உள்கட்டமைப்பு வளர்ச்சியும் சமன் செய்யப்பட வேண்டும். இந்தியா இப்போது இந்த சமச்சீர் நிலையை எட்டும் முயற்சியில் உள்ளது என்று யுவர்ஸ்டோரியின் உள்ளடக்கம் மற்றும் ஸ்ட்ராடெஜிக் கூட்டாண்மை இயக்குநருமான ஷிவானி முத்தண்ணாவிடம் கூறினார் யாஸ்மின்.
உள்கட்டமைப்பில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பது, பிறகு நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சார்ஜிங்குக்கு தேவையான மின்சாரம் இந்த மூன்று சவால்களும் இந்தத் துறையை எதிர்கொள்கின்றன. ஆனால், இந்தியா இப்போது நல்ல காலக்கட்டத்தில் இருப்பதாகக் கூறுகிறார் யாஸ்மின்.
மின்சார வாகனங்களின் பேட்டரிகள் ஒருபயணத்தை திருப்திகரமாக நிறைவு செய்ய போதுமானதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜவஹரலி,
“இந்தப் பிரச்சனைக்கு ஸ்வாப் நிலையங்கள்தான் தீர்வு அல்லது வேக மற்றும் அதிவேக சார்ஜிங் நிலையங்கள் தேவை.
புதிய வாகனம் வாங்கினால் பிரச்சினை தீரும் என்று எல்லோரும் நம்புகிறார்கள். ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நீடித்த இயக்கம் அப்படி இல்லை. புதிய வாகனம் வாங்குவது பூமித்தாயின் சுமையை அதிகரிக்கத்தான் போகிறது. ஏனெனில், நகர்ப்புறங்களில் மின்சார வாகன இயக்கத்திற்கான ஒருங்கிணைவு நடந்து தான் வருகிறது. இது மேலும் அதிகரிக்கவே செய்யும், என்கிறார் ஜவஹரலி.
E Daddy நிறுவனம் பேட்டரி தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது, இதோடு, மேற்கு ஆபிரிக்காவில் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகனங்களை கொண்டுள்ளது. இது கிராமப்புற இயக்கம், மறுசீரமைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஆட்டோ தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பல மாதிரிகளைக் கொண்டுள்ளது.