Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்’பின் பெயர்களை மாற்றப் போகிறதா Facebook?

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் ஆகிய சேவைகள் ஃபேஸ்புக் வழங்கும் எனும் அடையாளத்தை பெற உள்ளன. இதற்கு பயனாளிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப்’பின் பெயர்களை மாற்றப் போகிறதா Facebook?

Wednesday August 07, 2019 , 2 min Read

இனி இன்ஸ்டாகிராம் சேவை ’ஃபேஸ்புக் வழங்கும் இன்ஸ்டாகிராம்’ 'Instagram from Facebook' என்றும், வாட்ஸ் அப் சேவை ’ஃபேஸ்புக் வழங்கும் வாட்ஸ் அப்’ 'WhatsApp from Facebook,' என்றும் அழைக்கப்பட இருக்கிறது. இந்த இரண்டு சேவைகளையும் சொந்தமாகக் கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் அவற்றின் மீதான தனது உரிமையை வெளிப்படுத்தும் வகையில் பிராண்டில் மாற்றத்தைக் கொண்டு வர உத்தேசித்துள்ளது.

இன்ஸ்டாகிராம்
மார்க் ஜக்கர்பர்கிற்கு சொந்தமான ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராமை கையகப்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின், வாட்ஸ் அப்’பை கையகப்படுத்தியது. இதுவரை இரண்டு சேவைகளும், ஃபேஸ்புக் அடைமொழி இல்லாமல் தனித்து இயங்கி வருகின்றன.

ஆனால், இனி வரும் நாட்களில், ஆப் ஸ்டோர் பட்டியல் மற்றும் போன் ஸ்கீரினில், ஃபேஸ்புக் வழங்கும் எனும் அடைமொழியை பயனாளிகள் பார்க்கலாம். இந்த செய்தி முதலில் தி இன்பர்மேஷன் இணைய இதழால் வெளியிடப்பட்டு ஃபேஸ்புக்காலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

"இந்த சேவைகள் ஃபேஸ்புக்கின் அங்கம் என்பதை தெளிவாக்க விரும்புகிறோம்,” என அதன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

எனினும் பல பயனாலிகள் இதற்கு டிவிட்டரில் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.


வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கான முன்னோட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு, இந்த செயலிகளின் அடிப்படையை தொழில்நுட்பக் கட்டமைப்பை ஒன்றாக்கி, பயனாளிகள் சேவைகளுக்கு இடையே எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள வழி வகுக்கும். இதன் படி இன்ஸ்டாகிராம் பயனாளிகள், வாட்ஸ் அப் அல்லது மெசஞ்சரில் செய்தி அனுப்பலாம். இந்த மூன்று செயலிகளும் மொத்தம் 2.6 பயனாளிகளைக் கொண்டுள்ளன.


இந்த ஒருங்கிணைப்பு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஃபேஸ்புக் நேரடியாக வெளியிடாவிட்டாலும்,

“எங்கள் மேசேஜிங் சேவைகளை முழுவதும் என்கிரிப்ட் வசதி கொண்டதாக்க மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த சேவைகள் இடையே எளிதாக பரிமாற்றம் செய்து கொள்ள வழி செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்,” என ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்பை கட்டுப்படுத்த நிறுவனம் முயன்று வரும் நிலையில், ஐரோப்பாவில் போட்டிக்கு எதிரான தன்மை தொடர்பான விசாரணைக்கு உள்ளாகியுள்ளது. ஃபேஸ்புக் கடந்த 2013ம் ஆண்டு ஸ்னேப்சாட்டை வாங்க முயன்றது. ஆனால் அந்த செயலி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்