Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சென்னைக்கு ஓட்டுநரில்லா ரயில் சேவை - 36 மெட்ரோ ரயில்கள் தயாரித்து வழங்கும் Alstom India!

ஓட்டுனர் இல்லாத 3 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரயில்களை ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து வழங்கியுள்ளது ஆல்ஸ்டாம் நிறுவனம்.

சென்னைக்கு ஓட்டுநரில்லா ரயில் சேவை -  36 மெட்ரோ ரயில்கள் தயாரித்து வழங்கும் Alstom India!

Thursday October 17, 2024 , 2 min Read

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிலையான தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனமான Alstom, சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முதல் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை வழங்குகிறது.

ஓட்டுனர் இல்லாத 108 மெட்ரோ ரயில் பெட்டிகள் மேக் இன் இந்தியா ஆத்மநிர்பார் பாரத் முயற்சிகளின் ஒரு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் ரயில்கள் 11 மில்லியனுக்கும் அதிகமான சென்னைவாசிகள் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் பயணிக்க உறுதியளிக்கிறது.

இந்த ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலை ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்து அளித்துள்ளது.

இது முதல் ஓட்டுனர் இல்லாத ரயில் பெட்டியாகும். குறிப்பாக 100% முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில், மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பாதுகாப்பான பயணமாகவும், மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்துக்கு செயல்பாட்டு வேகத்துக்கும் ஏற்றவாறு இந்த மெட்ரோ ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Alstom India

பிப்ரவரி 2024-ல் இதன் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்த 36 ரயில்களை வழங்குகிறது ஆல்ஸ்டாம். மூன்று பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில்கள் 26 கிமீ பாதையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி பைபாஸ் மற்றும் லைட் ஹவுஸ் வரை 28 நிலையங்கள் வழியாக இந்த ரயில்கள் ஓடும். இதில் 18 மேல் ரயில் நிலையங்களும். 10 நிலத்தடி ரயில் நிலையங்களும் அடங்கும்.

124 மில்லியன் யூரோ மதிப்புள்ள இந்த திட்டத்தில் சென்னை மெட்ரோ பணியாளர்களுக்குப் பயிற்றுவித்தல், பராமரிப்பு பயிற்சி ஆகியவை அடங்கும். தானியங்கி ரயில் இயக்கம் (ஏடிஓ) மற்றும் தானியங்கி ரயில் பாதுகாப்பு (ஏடிபி) பொருத்தப்பட்ட இந்த மெட்ரோ ரயில்கள், ஆட்டோமேஷன் நிலை 4 (GOA 4) தரத்தைக் குறிக்கும், ஓட்டுநர் இல்லாமல் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2010ல் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தனது முதல் ஒப்பந்தத்தை வழங்கியதில் இருந்து, சென்னை மெட்ரோவின் முதல் கட்டத்திற்கு 208 மெட்ரோ கார்களை ஆல்ஸ்டாம் நிறுவனம் வழங்கியுள்ளது. கூடுதலாக, அல்ஸ்டாம் இந்த வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர்களை உள்ளடக்கிய பாதை வேலைகளை வடிவமைத்து, சோதனை செய்து அமைத்துள்ளது.

Driverless rail

ஆல்ஸ்டாம் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆலிவர் லாய்சன் கூறுகையில்,

“சென்னை மெட்ரோ திறமையான மற்றும் நம்பகமான போக்குவரத்தின் கலங்கரை விளக்கமாக மாறியுள்ளது, அதன் குடியிருப்பாளர்களின் தினசரி பயணங்களை மாற்றுகிறது. உலகத் தரம் வாய்ந்த, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை வழங்குவதன் மூலம் இந்த நோக்கத்தை ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறோம், இது பயணிகளின் அனுபவத்தை உயர்த்துவதோடு காற்றுமாசுவைக் குறைத்து சாலை நெரிசலைக் குறைக்க வழிவகை செய்கிறது,” என்றார்.