ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக முரளி சாமிநாதன் நியமனம்!
பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக ( சி.டி.ஓ), முரளி சாமிநாதன் இணைய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சி.டி.ஓ), முரளி சாமிநாதன் இணைய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
சி.டி.ஓவாக, ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்திகள், எதிர்கால பாதை மற்றும் நிறுவனத்தின் சர்வதேச பொறியியல், கட்டிடக்கலை குழுக்களை வழிநடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் செயல்பாடு மற்றும் வாடிக்கையாளர் அனுபவ தீர்வுகளை மேம்படுத்தும் வகையில், ஊழியர்கள் வளங்களில் கவனம் செலுத்துவது இந்த பொறுப்பில் அடங்கும். நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இணையும் முரளி சி.இ.ஓ மற்றும் தலைவர் டென்னிச் உட்சைடின் கீழ் செயல்படுவார்.
மென்பொருள் பொறியியல் மற்றும் மேலாண்மையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட முரளி சாமிநாதன், சர்வீஸ் நவ் நிறுவனத்தில் இருந்து ஃப்ரெஷ்வொர்க்ஸில் இணைகிறார். சர்வீஸ் நவ் நிறுவனத்தில் அவர், பொறியியல் துணைத்தலைவராக இருந்தார்.
தங்கள் திறமை வாய்ந்த பொறியாளர்கள் குழுவுக்கு முரளி சாமிநாதனை வரவேற்பதாக ஃப்ரெஷ்வொர்க்ஸ் சி.இ.ஓ டென்னிஸ் உட்சைடு கூறியுள்ளார்.
"முரளியின் அனுபவம், ஏஐ முதலீட்டில் தாக்கத்தையும் பலனையும் அளிப்பதில் ஈடுபாடு கொண்ட எங்கள் குழுவின் நோக்கத்தோடு பொருந்துகிறது. குறிப்பாக ஊழியர்கள் அனுபவத்தில் அவரது தலைமை பண்பு வழிகாட்டும்," என்று கூறியுள்ளார்.
சர்வீஸ்நவ் நிறுவனத்தில் இருந்த போது, நிறுவனத்தின் ஐடி சேவை நிர்வாகத்தின் அடிப்படையாக அமையும், நவீன உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
சர்வீஸ் நவ் நிறுவனத்திற்கு முன் அவர், ஓபன் டெக்ஸ்ட் நிறுவனத்தின் பொறியியல் துணைத்தலைவராக இருந்தார். அதற்கு முன், சிஏ டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அண்ணாமலை பல்கலையில் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றவர், கார்னகி மெலான் பல்கலையில் மென்பொருள் பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார்.
பன்னாட்டு அளவில் பெரிய நிறுவனமாக வளரும் நிலையில் இந்நிறுவன குழுவில் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக புதிய பொறுப்பு குறித்து முரளி சாமிநாதன் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan