மின்வாகன எலெக்ட்ரிக் மொபிலிட்டி திட்டத்தை நீட்டித்த மத்திய அரசு!
இத்திட்டத்தின் மூலம் அரசு பசுமை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதையும், நாட்டில் EV உற்பத்தி சூழலின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
எலக்ட்ரிக் மொபிலிட்டி ஊக்குவிப்புத் திட்டத்தை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து செப்டம்பர் இறுதி வரை நீட்டிப்பு செய்துள்ளது மத்திய அரசு. மேலும், மொத்த செலவினத்தை ரூ.500 கோடியிலிருந்து ரூ.778 கோடியாக உயர்த்தியது.
இத்திட்டத்தின் மூலம் அரசு பசுமை முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதையும், நாட்டில் EV உற்பத்தி சூழலின் வளர்ச்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கனரக தொழில்துறை அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.
இ.எம்.பி.எஸ் திட்டம் முதலில் ஏப்ரல் 1, 2024 முதல் ஜூலை 31, 2024 வரை மொத்தம் ரூ.500 கோடி செலவில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது இத்திட்டம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு செலவினமும் ரூ.778 கோடியாக உயர்த்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தகுதியான EV வகைகளில் பதிவுசெய்யப்பட்ட இ-ரிக்ஷாக்கள் மற்றும் இ-கார்ட்கள் மற்றும் L5 வகை உட்பட மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை அடங்குகின்றன.
பொதுமக்களுக்கு மலிவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொது போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, வணிக நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட்ட e-2W மற்றும் e-3W களுக்கு இந்த திட்டம் பொருந்தும். மேலும், வணிக பயன்பாட்டிற்கும் கூடுதலாக, தனியார் மற்றும் எந்த ஒரு நிறுவனத்திற்கும் சொந்தமான பதிவு செய்யப்பட்ட e-2W இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறும்.
எலக்ட்ரிக் மொபிலிட்டி ப்ரோமோஷன் திட்டம் (EMPS) - 2024 என்னும் முயற்சி நாட்டில் பசுமை இயக்கம் மற்றும் மின்சார வாகன (EV) உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.