தொழில்நுட்பக் காலத்தில் நீங்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு நம்பகமான I’m Safe பாதுகாப்பு செயலி குறித்து முழு விவரங்களை பார்க்கலாம்
பொதுவாக ஒருவரிடம் சென்று நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்று கேட்டால். கண்டிப்பாக நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று தான் பெரும்பாலானோர் சொல்வார்கள்.
'பாதுகாப்பு' என்பது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து நம்மை கவனித்துக் கொள்வது மட்டுமல்ல, இது தொழில்நுட்பக் காலம். விரைவில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி பதிக்க இருக்கிறான். இந்த காலக்கட்டத்தில் நம்மோடு ஒன்றி உறவாடும் மொபைலில் இருந்து தான் நமக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது.
நம்மிடம் அதிக சேமிப்புத் தொகையெல்லாம் ஒன்றுமில்லை, ஹேக்கர்கள் நம்மையெல்லாம் குறிவைப்பார்களா என்றால், ஆம், ஒவ்வொருவரும் இணைய மோசடிக்கு உள்ளாகிறார்கள்.
நீங்கள் கூகுளில் தேடும் ஒரு பொருள், முகநூலில் விளம்பரமாக காட்டப்படுவது எப்படி? நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொபைல் போன் பயன்பாடு என்பது பிரதானமாக மாறிவிட்டது. அதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும், அதனிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். குறிப்பாக காரணமில்லாமல் வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம், தங்களது வங்கி தரவுகள், சுயவிவரங்களை எதிலும் எவரிடமும் பகிர வேண்டாம். குறிப்பாக பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள், முதியவர்கள் தனியாக பயணம் செய்யும் போது பிற செயல்பாடுகளிலும் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த வழிமுறைகளை பார்க்கலாம்.
I’m Safe என்பது பெண்கள் பாதுகாப்பு செயலி ஆகும். இது பாலியல் துன்புறத்தல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். இந்த பயன்பாடானது பிளாக்செயின் போன்ற தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு இன்றியமையாத தீர்வாக இருக்கும். இந்த செயலியில் டிராக் மீ, எஸ்ஓஎஸ், பேட்டரி ஆப்டிமைசேஷன், டேட்டா பாதுகாப்பு போன்ற பல்வேறு பயன்பாடுகள் இதில் இருக்கிறது.
Track Me:
’டிராக் மீ’ என்ற அம்சம் தங்களது பிடித்தமானவர்களுக்கு தங்கள் இருப்பிடம் குறித்த தகவலை எப்போதும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதன்காரணமாக நேரம் காலம் பார்க்காமல் பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நமக்கு எப்போது ஒருவர் பாதுகாப்பாக உடன் வருவார்கள் என்று கருத இயலாது. நமது பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்.
இந்த செயலியில் ஐந்த நம்பகமானவர்களை இணைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள "என்னைக் கண்காணிக்கவும்" என்ற பட்டனை கிளிக் செய்யும் போது அவர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படும். அவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடியே உங்களைக் கண்காணிப்பார்கள்.
இது ஜிபிஎஸ் டிராக் பயன்பாடாகும். இதில் "எப்போதும்" என்ற விருப்பமும் இருக்கிறது. இதை கிளிக் செய்து வைப்பதன் மூலம் உங்கள் இருப்பிடத்தை எப்போதும் ஒருவர் கண்காணிக்க முடியும்.
SOS:
SOS பயன்பாடானது பயனர்கள் அவசரநிலையை எதிர்கொள்ளும் போது, இதை உடனடியாக செயல்படுத்த முடியும். SOS என்ற தேர்வை கிளிக் செய்த உடன் தங்கள் நம்பகமான தொடர்புகளுக்கு விழிப்பூட்டலை இந்ச செயலி அனுப்புகிறது.
SOS பயன்பாடு அணைக்கப்படும் வரை இது குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஒலிகளை பதிவு செய்வதோடு, கேமரா தானாக ஓபன் செய்து புகைப்படங்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது.
SOS தவறாக கிளிக் செய்யும்பட்சத்தில் தங்களுக்கு 5 வினாடிகள் நேரம் வழங்கப்படும் அதற்குள் இதை ரத்து செய்யலாம்.
பேட்டரி பாதுகாப்பு
அவசரமாக நகரும் காலக்கட்டத்தில் நமக்கு மொபைலை சார்ஜ் செய்யக்கூட நேரம் இல்லாத சூழல் இருக்கிறது. அதற்கு ஏற்ப மொபைல் நிறுவனங்களும் அதிவேகத்தில் மொபைலை சார்ஜ் செய்யும் வகையில் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
இருப்பினும், பேட்டரி சூடாகும் பட்சத்தில் அது நமக்கு பெரும் ஆபத்து என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயன்பாட்டில் மொபைலை வைத்திருந்தால் பேட்டரி சூடாகும், சார்ஜ் செய்து கொண்டே போன் பேசினால் பேட்டரி சூடாகும் இவை அனைத்தும் தெரிந்ததே.
ஆனால், மொபைல் நமது ஜீன்ஸ் பேண்ட் போன்றவற்றில் இருக்கமாக வைத்திருந்தாலும் மொபைல் சூடாகும் அபாயம் இருக்கிறது. பெங்களூருவில் இப்படி வைத்து சென்ற ஒருவரின் பேண்ட் பாக்கிட்டிலேயே மொபைல் வெடித்தும் இருக்கிறது.
தங்களது மொபைலில் பேக்கிரவுண்ட் செயல்பாடு, அதாவது மொபைலை பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும் குறிப்பிட்ட செயலிகள் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். தாங்கள் நோட்டிபிகேஷன் பெறும் அனைத்து செயலிகளும் பேக்கிரவுன்ட் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதை குறைப்பது மிக நல்லது. இதில் உள்ள பேட்டரி ஆப்டிமைசேஷன் என்ற பயன்பாடானது தேவையில்லாமல் பேக்கிரவுன்டில் செயல்படும் செயலியை நிறுத்த உதவுகிறது.
டேட்டா பாதுகாப்பு:
டேட்டா பாதுகாப்பு என்பது நாம் சேகரித்து வைத்திருக்கும் தரவுகளை தனித்துவமாக பாதுகாக்கிறது. நமது மொபைலில் வங்கித் தரவில் இருந்து புகைப்படம் என பல்வேறு முக்கியத் தகவல்கள் இருக்கிறது. இதை பாதுகாப்பாக வைப்பது என்பது மிக அவசியம்.
இதில், உள்ள டேட்டா பாதுகாப்பு அம்சத்தின் மூலம் தங்கள் தரவுகள் அனைத்தும் குவாண்டம் லெட்ஜர் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகிறது. இதில் தங்களைத் தவிர வேறு யாராலும் தரவை மாற்றவோ புதுப்பிக்கவோ முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.