இந்தியாவில் கோவிட் தொற்றைத் தடுக்க $500 மில்லியன் நிதி உதவி அளிக்கும் AIIB!
இந்த நிதி பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புக்கும் அபாயம் உள்ளவர்கள் மருத்துவ மற்றும் அவசரகால பணியாளர்கள், சேவை வழங்குவோர், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வக வசதிகள் மேம்பாட்டில் பயன்படுத்தப்படும்.
கோவிட்-19 பெரும் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கும் அதன் பொது சுகாதார முன்னேற்பாடுகளும் உதவும் வகையிலான 'கோவிட் அவசரகால மீட்பு மற்றும் சுகாதார முறைகள் முன்னேற்பாடு திட்டம்' என்னும் 500 மில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தில் இந்திய அரசும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இன்று கையெழுத்திட்டன. இந்த வங்கி இந்தியாவுக்கு சுகாதார பிரிவு ஆதரவை முதன்முதலாக வழங்குகிறது.
இந்தப் புதிய உதவி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும். பாதிக்கப்பட்ட மக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளவர்கள் மருத்துவ மற்றும் அவசரகால பணியாளர்கள் சேவை வழங்குவோர், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வக வசதிகள் தேசிய மற்றும் விலங்கு சுகாதார முகமைகளின் தேவைக்கு இது உதவும்.
இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலர் சமீர் குமார், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் சார்பில் தலைமை இயக்குனர் பிரசாத் மிஸ்ரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இந்த உரிய நேரத்தில் அளித்துள்ள உதவி, கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் அரசின் முயற்சிகளுக்கும் இந்தியாவில் தேசிய முன்னேற்பாடு சுகாதார முறைகளை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும் என்று கூறினார்.
பெருந்தொற்றை சமாளிக்கும் அவசரத்தைக் கருதி இந்தத் திட்டம் குறைந்த காலத்தில் நிதி மற்றும் சுகாதார அமைச்சகங்கள் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகளின் முயற்சியால் தயாரிக்கப்பட்டது.
பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், ஆக்சிஜன் வழங்கும் கருவிகள், மருந்துகள் கொள்முதலை அதிகரித்தல், போன்ற நோய் கண்டறியும் திறனை அதிகரிக்க உடனடி ஆதரவை இது வழங்கும்.
அதோடு பொது சுகாதாரத்தை பேணும் தடுப்பு சுகாதார முறைகளை கட்டமைத்தல், நோய் தடுப்பு வருங்காலத்தில் கோவிட் மற்றும் இதர நோய்களால் ஏற்படும் நோயாளி மேலாண்மை இயக்கத்தை பராமரித்தல், இந்தியா மற்றும் இதர உலக அமைப்புகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு ஆதரவு அளித்தல், கோவிட்19 தொற்று பரவலால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை எதிர்ப்பார்த்து சமாளிக்கும் நடைமுறை, இத்திட்டத்தை ஒருங்கிணைத்து மேலாண்மை செய்யும் போது அமைப்புகளை வலுப்படுத்துதல் என கோவிட் நோயை கட்டுப்படுத்த இந்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கு இந்தத் திட்டம் உதவும்.
பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளவர்கள் இந்தியாவின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்புடைய மருத்துவ மற்றும் அவசரகால பணியாளர்கள் சேவை வழங்குவோர், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆய்வக வசதிகள், (பொதுத்துறை மற்றும் தனியார்) பொது மக்கள் மற்றும் விலங்கு சுகாதார முகமைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும்.
“தடுப்பு சுகாதார முறையை கட்டமைத்தல் மூலம் கோவிட் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து பரவலை தடுப்பது உடனடி முன்னுரிமை ஆகும் என்றும், இந்த நிதியுதவி தேவையை பூர்த்தி செய்வதுடன் வருங்காலத்தில் நோய் தொற்றுகளை திறமையாக சமாளிக்கும் இந்தியாவின் திறனை வலுப்படுத்தும், என்று ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணை தலைவர் பாண்டியன் கூறினார்.
கோவிட் 19 மற்றும் வருங்காலத்தில் பரவும் நோய் தொற்றுகளை சிறப்பாக சமாளிக்கவும் நோயாளிகளைச் சிறந்த முறையில் கவனிப்பது, தடுப்பு முறை, பொது சுகாதாரத்தை வழங்கும் இந்தியாவின் சுகாதார முறையின் விரிதிறனை அதிகரிக்கும்.
இந்தியாவின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் தொற்றுநோய் மருத்துவமனைகள் மாவட்ட பொது மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சீரமைத்தல், உயர் கட்டுப்பாட்டு உயிர் பாதுகாப்பு, மூன்றாம் அளவு சோதனைக் கூடங்கள் கட்டமைப்பை உருவாக்குதல், ஆகியவற்றுக்கும் இது உதவும்.
இத்திட்டம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி) மற்றும் தேசிய சுகாதார இயக்கம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும்.
தகவல்: பிஐபி