Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

‘Ai, எலக்ட்ரானிக்ஸ், செமி கண்டக்டர் துறைகளில் இந்திய ஸ்டார்ட்அப்கள் ஜொலிக்கிறது’ - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

2026க்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்கு 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வளர வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

‘Ai, எலக்ட்ரானிக்ஸ், செமி கண்டக்டர் துறைகளில் இந்திய ஸ்டார்ட்அப்கள் ஜொலிக்கிறது’ - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

Thursday November 30, 2023 , 2 min Read

2026க்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்கு 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வளர வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப்-டெக் நிகழ்வான TechSparks 2023 இல் தொலைத்தொடர்பு தொழில்முனைவோராக இருந்து இன்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம், டிஜிட்டல்மயமாக்கல், எலெக்ட்ரானிஸ், செமி கண்டக்டர் போன்ற துறைகளின் வளர்ச்சி குறித்து விவாதித்தார்.

IT Minister Rajeev Chandrasekhar

IT Minister Rajeev Chandrasekhar

இந்தியாவில் ஏஐ தொழில்நுட்பம்:

2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்கை ஐந்தில் ஒரு பங்காகவும், தற்போதுள்ள 11சதவீதத்தை அல்லது 20 சதவீதமாகவும் அதிகரிப்பதே AI மீதான இந்தியாவின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.

"AI இன் எதிர்காலத்தில் இந்திய கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு முக்கிய பங்களிப்பு உள்ளதை நாங்கள் காண்கிறோம், குறிப்பாக விவசாயம், நிர்வாகம், சுகாதாரம், மொழி மொழிபெயர்ப்பு மற்றும் பிறவற்றின் நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளில் முக்கியத்துவம் உள்ளது."

டிசம்பரில் டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக AI ஸ்டார்ட்அப்களுக்கு குறிப்பிடத்தக்க GPU களை (கிராபிக்ஸ் செயலாக்க அலகுகள்) வழங்க அரசாங்கம் விரும்புவதாகக் கூறினார்.

இந்திய ஸ்டார்ட்அப்கள், குறிப்பாக AI மற்றும் AI ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில், இந்திய தரவுத்தொகுப்பு தளத்தில் சிறந்து விளங்குவதாக கூறினார்.

“2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், AIக்கான குறியீட்டை உருவாக்கத் தேவைப்படும் மாறுபட்ட, சக்திவாய்ந்த தரவுத்தொகுப்புகளின் உலகின் மிகப்பெரிய சேகரிப்புகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்”
RAJEEV CHANDRASEKHAR

மேட்-இந் இந்தியா:

நாட்டிற்குள் உற்பத்திக்கு அளிக்கப்படும் ஊக்கத்துடன், உலகளாவிய மின்னணு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க இந்தியாவும் போட்டியிடும். இணையதளத்தை தவிர, இந்திய ஸ்டார்ட்அப்கள் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி-கண்டக்டர் துறைகளிலும் பரந்து விரிவதை பார்க்கமுடியும் என்றார்.

“2014ல், மொபைல் ஃபோன் ஏற்றுமதி இல்லை. கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சம் கோடி ஆப்பிள் மற்றும் சாம்சங் போன்களை இந்தியாவில் அசெம்பிள் அல்லது தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.

டிஜிட்டல் இந்தியா ஃபியூச்சர் லேப்ஸ் திட்டம், தகவல் தொடர்பு மற்றும் கணக்கீடு ஆகிய துறைகளில் ஸ்டார்ட்அப்கள் ஊக்குவிக்கப்படும்.

தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு 12 ஆண்டுகள் தொழில்முனைவோராக இருந்த அமைச்சர், மாற்றுப்பாதையை தேர்வு செய்ய குறுக்குவழிகள் எதுவும் இல்லை எனக்கூறியுள்ளார்.

தோல்வி ஏற்படும் அபாயம் எப்பொழுதும் உள்ளது, ஆனால் அரசியல் சாராத பின்னணியில் இருந்து வரும் மக்களிடம் இது எப்போதும் இருந்ததை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது,” என்றார்.

இறுதியாக இரவு பகலாக வேலை செய்வதை விட கள அறிவும் குணமும் வெற்றிக்கு முக்கியமாகும் என ஸ்டார்ட்அப் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.