‘மற்ற நகரங்களைவிட சென்னை மக்கள் மகிழ்ச்சி குறைவாக இருக்கிறார்கள்’ - ஆய்வில் சுவாரசிய தகவல்!
இந்திய இல்லங்களில் மகிழ்ச்சி நிலையை அறிய நடத்திய வேக்ஃபிட்.கோ நடத்திய ஆய்வில், மற்ற மெட்ரோ நகரங்களை விட சென்னை, இல்லத்தில் செயல்பாடு, சமூக நோக்கில் குறைந்த அளவிலான மகிழ்ச்சியை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்திய இல்லங்களில் மகிழ்ச்சி நிலையை அறிய
நடத்திய ஆய்வில், மற்ற மெட்ரோ நகரங்களை விட சமூக அம்சங்கள் மற்றும் இல்ல செயல்பாடுகளில் சென்னை மக்கள் குறைந்த அளவிலான மகிழ்ச்சியை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இல்ல பர்னீச்சர்கள், உள் அலங்காரத்திலும் சென்னைவாசிகள் குறைந்த அளவே மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிய வந்துள்ளது.அதேபோல், இந்திய பெண்களை விட, ஆண்கள் வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வீட்டில் மாற்றங்களை செய்ய முடிவதில் ஆண்கள் அதிக மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய டி2சி விற்பனை மற்றும் மெத்தை உள்ளிட்ட தூக்கம் சார்ந்த தீர்வுகளை வழங்கும் ’வேக்ஃபிட்.கோ’ (Wakefit.co) நிறுவனம் இந்தியர்கள்: தங்கள் இல்லத்துடன் கொண்டிருக்கும் உறவை அறியும் வகையில் கருத்துக்கணிப்பை நடத்தியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மூவாயிரம் பேருக்கு மேல் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு அடிப்படையில் நிறுவனம் ’மகிழ்ச்சி இல்லம்’ அட்டவனை 2024 –ஐ வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, மக்கள் தங்கள் வீட்டு ஃபர்னீச்சர்கள், உள் அலங்காரம் போன்றவற்றுடன் கொண்டுள்ள தொடர்பு, வீட்டிற்கு திரும்பி வருவது தொடர்பான மகிழ்ச்சி மற்றும் இல்லம் சார்ந்த சமூக மகிழ்ச்சி ஆகிய அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இந்த ஆய்வில் பரிசீலிக்கப்பட்ட அம்சங்கள் வருமாறு:
● செயல்பாட்டு மகிழ்ச்சி- வீட்டின் ஃபர்னீச்சார், உள் அலங்காரம், ஒளி அமைப்பு போன்ற அம்சங்களுடன் குடும்பத்தினரின் உறவும்.
● உணர்வு நிலை மகிழ்ச்சி- வீட்டிற்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி அளவு, சுய வெளிப்பாடு சுதந்திரம், வீட்டிற்குள் கட்டுப்பாடு, மாற்றத்தை கொண்டு வரும் தன்மை.
● சமூக மகிழ்ச்சி- இருத்தலின் மகிழ்ச்சி, தனி மற்றும் பகிர்வு இடங்களின் சமநிலை மற்றும் வீட்டில் பகிர்வு செயல்பாடுகளில் மகிழ்ச்சி.
இந்த ஆய்வில்,
இந்தியர்கள் பொதுவாக தங்கள் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. பத்து எனும் அளவுகோளில் இது 8.2 ஆக இருக்கிறது. செயல்பாட்டு மகிழ்ச்சி (7.54), சமூக மகிழ்ச்சி (7.9) குறைவாக இருந்தாலும் உணர்வு நலம் இல்லத்தின் மகிழ்ச்சியில் (8.54) முக்கியப் பங்கு வகிக்கிறது. இல்லம் மகிழ்ச்சியின் சரணாலயமாக இருந்தாலும், ஃபர்னீச்சர்களுடன் (7.64), உள் அலங்காரம் (7), ஒளி அமைப்பு (7.98) ஆகியவற்றுடனான உறவு நிலை மகிழ்ச்சி குறைவாக உள்ளது.
ஆண்களிடம் அதிக மகிழ்ச்சி
பரவலாக கருதப்படுவதற்கு மாறாக, இல்லத்திற்குள் ஆண்கள் (8.3) பெண்களை விட (7.78) அதிகம் மகிழ்ச்சியாக உள்ளனர். அறிக்கையின் தகவல் படி, ஆண்கள் இல்லச் சூழலில் மற்றும் உணர்வு நோக்கில் மகிழ்ச்சி கொள்கின்றனர். ஆண்களும், பெண்களும், இல்லத்திற்கு திரும்பும் உணர்வில் சமநிலை கொண்டிருந்தாலும், வீட்டில் மாற்றங்களை செய்யும் சுதந்திரத்தில் ஆண்கள் 16 சதவீதம் அதிகம் மகிழ்ச்சி அடைகின்றனர்.
இல்லத்தின் ஒவ்வொரு சமூக அம்சத்திலும் ஆண்கள் அதிகம் மகிழ்ச்சி அடைகின்றனர். இருப்பின் உணர்வில் 2 சதவீதம் அதிக மகிழ்ச்சி; பகிர்வு, தனி இடத்தில் 8 சதவீத அதிக மகிழ்ச்சி, பகிர்வு செயல்பாட்டில் 6 சதவீத அதிக மகிழ்ச்சி கொள்கின்றனர்.
மத்திய வயதினர் மகிழ்ச்சி
45 வயதுக்கு மேலானவர்கள், 18 -25 வயதானவர்களை விட, தங்கள் இல்லத்தில் 16.7 சதவீதம் அதிக மகிழ்ச்சியுடன் உள்ளனர். மேலும், 45 வயதுக்கு மேலானவர்கள் இளம் வயதினரைவிட, 6 சதவீதம் தங்கள் இல்லத்திற்கு திரும்புவதில் அதிகம் மகிழ்ச்சி கொள்கின்றனர்.
இந்த தலைமுறையினர் தங்கள் சுதந்திர வெளிப்பாடு மற்றும் இல்ல சூழல் கட்டுப்பாட்டில் மகிழ்ச்சியை உணர்கின்றனர்.
இளம் வயதினரைவிட, மத்திய வயதினர் ஒட்டுமொத்த மகிழ்ச்சியில் முன்னிலை பெற்றிருந்தாலும், செயல்பாடு மகிழ்ச்சி (7.9), உணர்வு நிலை மகிழ்ச்சி (8.87) மற்றும் சமூக மகிழ்ச்சியை விட (8.12) குறைவாக உள்ளது.
சென்னை நகரின் நிலை
இல்லத்திற்குள் மகிழ்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மகிழ்ச்சி அட்டவனை அளவில், சென்னை மற்றும் மும்பை (8) குறைவான அளவு கொண்டுள்ளன. ஐதராபாத் அதிக எண்ணிக்கை (854) கொண்டுள்ளது.
மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது,
- பர்னீச்சர்களுடனான உறவில் சென்னை குறைவான மகிழ்ச்சி கொண்டுள்ளது.(7.18)
- இல்ல அலங்காரம் சார்ந்த மகிழ்ச்சியில் சென்னை மற்ற நகரங்களுடன் ஒப்ப்டும் போது குறைவாக உள்ளது.
- (6.6) உணர்வு நிலையில் சென்னை மிதமான அதிக அளவு மதிப்பெண் பெற்றுள்ளது.
- உணர்வு நிலை மகிழ்ச்சியில் மும்பை முன்னிலையில் உள்ளது. இல்லத்திற்கு திரும்புவதில் மகிழ்ச்சி அடைவதில் 9.32 பெற்றுள்ளது மற்றும் இல்லத்தில் தங்களை வெளிப்படுத்துவதில் 8.88 பெற்றுள்ளது.
- வீட்டில் மாற்றங்களை செய்யும் கட்டுப்பாட்டில் 8.8 பெற்றுள்ளது. சமூக அம்சத்தில் பெங்களூரு (9.2) முன்னிலையில் உள்ளது.
- தனி இடம் மற்றும் பகிர்வு இட சமநிலையில் ஐதராபாத் (7.86 ) முன்னிலை பெற்றுள்ளது. சென்னை (6.74) பெற்றுள்ளது.
- இல்லத்தில் பகிர்வு செயல்பாடுகள் மகிழ்ச்சி அளவில் சென்னை (7.18) குறைவாக உள்ளது.
ஒட்டுமொத்த இல்ல மகிழ்ச்சி அளவில் ஐதராபாத் முன்னிலை வைக்கிறது. உணர்வு நிலை மகிழ்ச்சியில் மும்பை முன்னிலை வகிக்கிறது.
செல்லப்பிராணிகள்:
தனி குடும்பத்தில் வசிப்பவர்கள் இந்த அட்டவனையில் முன்னிலை பெற்றுள்ளனர். எனினும், தனியே வசிப்பவர்கள் மகிழ்ச்சி அட்டவனையில் மிகவும் கீழே உள்ளனர். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
"மகிழ்ச்சி இல்லம் அட்டவனை நம்முடைய தனி வாழ்க்கை சார்ந்த உணர்வு, செயல்பாடு மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பான சுவாரஸ்யமான புரிதலை வழங்குவதாக,” வேக்ஃபிட்கோ இணை நிறுவனர், இயக்குனர் சைதன்யா ராமலிங்க கவுடா கூறியுள்ளார்.
“இந்த அட்டவனை மகிழ்ச்சிக்கான அளவுகோள் மட்டும் அல்ல. இந்திய இல்லங்களின் பரிணாமத்தையும் இது உணர்த்துகிறது. இல்லங்களில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு கதை சொல்கிறது என அவர் கூறியுள்ளார்.
ஆய்வு மற்றும் புதுமையாக்கம் அடிப்படையிலான தூக்கம் சார்ந்த சேவைகளை வழங்கும் வேக்பிட்.கோ 2016 ம் ஆண்டு அங்கிடி கார்க் மற்றும் சைதன்யா ராமலிங்க கவுடாவால் துவக்கப்பட்டது. மெத்தைகள், தலையணைகள், விரிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.
'கொரோனாவிற்கு பிறகு இளம் தலைமுறையின் மனநிலை கடும் பாதிப்பு' - ஆய்வு முடிவு சொல்வது என்ன?
Edited by Induja Raghunathan