Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் 5% உயரும்!

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இந்த ஆண்டு முதலீடு 5% உயர்ந்து, 6.5 பில்லியன் டாலராக (ரூ.46,000 கோடி) இருக்கும் என சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான காலியர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் 5% உயரும்!

Saturday January 18, 2020 , 2 min Read

இந்திய ரியல் எஸ்டேட் துறையில் இந்த ஆண்டு முதலீடு 5 சதவீதம் உயர்ந்து, 6.5 பில்லியன் டாலராக (ரூ.46,000 கோடி) இருக்கும் என சர்வதேச ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான காலியர்ஸ் தெரிவித்துள்ளது.


ஐடி நிறுவனங்களிடம் இருந்து உண்டாகும் வர்த்தகத் தேவை இதற்கு முக்கியக் காரணமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட்

கடந்த ஆண்டு, ரியல் எஸ்டேட் துறை 6.2 பில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்தது, 2018ம் ஆண்டைவிட இது 8.7 சதவீதம் அதிகமாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அலுவலக கட்டிடங்களை வாங்கின. 2019ல் மொத்த முதலீட்டில் 78 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


2008 முதல் இந்திய ரியல் எஸ்டேட் துறை 56.6 பில்லியன் டாலர் ( ரூ.4,10,000 கோடி) முதலீட்டை ஈர்த்துள்ளதாக கால்லியர் தெரிவிக்கிறது.

 "2019ல் ரியல் எஸ்டேட் முதலீடு 6.2 பில்லியன் டாலராக இருந்தது. 2020ல் இத்துறை முதலீடு 6.5 பில்லியன் டாலராக இருக்கும்,” என கால்லியர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டாளர்கள் அலுவலகக் கட்டிடங்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் இதன் காரணமாக வாடகை மேலும் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


"2020ல் வரும் முதலீட்டில் வர்த்தக அலுவலகப் பிரிவி 40 சதவீதத்தை ஈர்ர்கும்,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறை 2019ல், 2.8 பில்லியன் டாலர் அளவில், (ரூ.19,900 கோடி), 46 சதவீத முதலீட்டை ஈர்த்தது.


ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை வாரியம், ஜி.எஸ்.டி, திவால் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் முதலீட்டாளர்கள் ஆர்வத்தை அதிகமாக்கியுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.


பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புனேவில் அதிகரிக்கும் ஐடி தேவையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கட்டப்பட்டு வரும் அலுவலகக் கட்டிடங்களில் கவனம் செலுத்தலாம் என்றும் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தத் துறையில் நீடிக்கும் தேக்க நிலைக் காரணமாக, முதலீட்டாளர்கள் குடியிருப்பு திட்டங்களைக் கவனமாக அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகளுக்காக பிற நகரங்களுக்கு குடிபெயரும் தொழில்முறையினரின் தேவை காரணமாக கோலிங் பிரிவு வளர்ச்சி அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேர்ஹவுசிங், ரீடைல் மற்றும் கோவொர்கிங் பிரிவுகளும் வளர்ச்சி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்