மலையாளச் சிறுகதையை இந்தியில் மொழிபெயர்த்த புலம் பெயர் தொழிலாளி மகனுக்கு குவியும் பாராட்டுகள்!
பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்திலிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் கொச்சிக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளி சனோஜ் குமார் தாக்கூர். இவரது மனைவி டிம்பிள் தேவி. இவர்களது மகன் ஆர்யன் தாக்கூர்.
பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்திலிருந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவின் கொச்சிக்குப் புலம் பெயர்ந்த தொழிலாளி சனோஜ் குமார் தாக்கூர். இவரது மனைவி டிம்பிள் தேவி. இவர்களது மகன் ஆர்யன் தாக்கூர்.
சிறுவன் ஆர்யன் தாக்கூர் தொடர்ந்து ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மலையாள சிறுகதையை ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டான். “Pyaj Karhi Aur Nau Ki Pahaada” என்ற தலைப்பில் 19 பக்க புத்தகம் ஜூலை 11, வியாழன் அன்று, கொச்சியில் உள்ள ஸ்ரீ ருத்ர விலாசம் UP பள்ளியில் நடந்த அர்ப்பணிப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது, அங்கு தாக்கூர் 7 ஆம் வகுப்பு வரை படித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
விருது பெற்ற எழுத்தாளர் ப்ரியா ஏ.எஸ் எழுதிய ‘உள்ளித்தீயாலும் ஒன்பதிந்தே பட்டிக்காயும்’ என்ற மலையாளச் சிறுகதையை ஆர்யன் தாக்கூர் தனது மலையாளப் பாடப் புத்தகத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்த்தார்.
இந்த மொழிபெயர்ப்புப் புத்தகத்தை மூல ஆசிரியர் பிரியா வெளியிட்டார்.
“விருதுகளைப் பெறுவதை விட இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் தி சாலிட்டரி ரீப்பர் என்ற கவிதையை நான் சிறுவயதில் மலையாளத்தில் மொழிபெயர்த்ததை இது எனக்கு நினைவூட்டுகிறது,” என்றார்.
மொழிபெயர்ப்பை நிகழ்த்திய 8-ம் வகுப்பு மாணவன் ஆர்யன் தாக்கூர் கூறும்போது,
“மொழிபெயர்ப்பு செய்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, எதிர்காலத்தில் இன்னும் பல படைப்புகளை மொழிபெயர்க்க விரும்புகிறேன்,” என்றார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்ரீ ருத்ர விலாசம் உ.பி.பள்ளியில் நடந்த ஆண்டு தின விழாவில், சமூக சேவகி ரூபா ஜார்ஜ் மாணவர்களிடம் வாசிக்கும் திறன்களை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ள பெரும்பாலான மாணவர்களைக் கொண்ட இந்தப் பள்ளி ரூபா ஜார்ஜின் அவரது பரிந்துரையை ஏற்று, 'வளரும் எழுத்தாளர்கள்' முயற்சியை அறிமுகப்படுத்தியது, அங்கு மாணவர்கள் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்க ஊக்குவிக்கப்பட்டனர்.
இந்த ஊக்குவிப்பு முயற்சிக்கு ஆசிரியர்களால் ஆர்யன் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளான். இவரது இந்தி ஆசிரியர் ஜோதி பாலாவின் வழிகாட்டுதலில் சுமார் ஒன்றரை மாதம் இந்த மொழிபெயர்ப்பில் சிறுவன் ஈடுபட்டு கடைசியில் ஒரு முழுமையான மொழிபெயர்ப்புப் படைப்பாக இது வெளிவந்துள்ளது.
IE மலையாளம் வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட, 2018-ம் ஆண்டின் கேரள வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்ட குழந்தைகள் நாவலுக்காக பிரியா 2023 இல் (கேந்திர) சாகித்ய அகாடமி பரிசை வென்றார். 2020 இல் இதே நாவலுக்காக குழந்தை இலக்கியத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார்.
பிரியாவே ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்தான், இவர் ஜெய்ஸ்ரீ மிஸ்ராவின் “Ancient Promises” மற்றும் அருந்ததி ராயின் The God of Small Things ஆகிய படைப்புகளை மலையாளத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். இதில் அருந்ததி ராய் புத்தக மொழிபெயர்ப்புக்காக 2014-ல் சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதையும் பெற்றுள்ளார்.
சிறுவனின் மொழிபெயர்ப்புப் பற்றி எழுத்தாளர் பிரியா கூறுகையில்,
“அவரது சிறுகதை உலகத்தைப் பற்றிய குழந்தையின் பார்வையைப் பற்றியது என்றும், தாக்கூர் மொழிபெயர்ப்பிற்கு நியாயம் செய்துள்ளார்,” என்று பாராட்டினார்.
சிறுவன் தாக்கூரின் தந்தை கப்பலில் ஹேர்டிரெஸ்ஸராகப் பணியாற்றுகிறார். பெற்றோருக்கு 10 ஆண்டுகள் ஆகியும் மலையாளம் கற்றுக் கொள்ள முடியாத நிலையில் சிறுவன் ஆரியன் தாக்கூர் மொழிபெயர்ப்பையே செய்யும் அளவுக்கு மொழியில் திறமையை வளர்த்துக் கொண்டிருப்பது பலத்த பாராட்டுதல்களை ஈர்த்துள்ளது.
தகவலுதவி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்