Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு: 11 மாவட்டங்கள் நீங்கலாக வகை-2, 23 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் என்ன?

தமிழ்நாட்டில், ஊரடங்கு உத்தரவு 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில், தனியார் நிறுவனங்கள் செயல்பாடு, கல்வி நிறுவனங்களில் நிர்வாக பணிகள் உள்ளிட்ட புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜூன் 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு: 11 மாவட்டங்கள் நீங்கலாக வகை-2, 23 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் என்ன?

Sunday June 20, 2021 , 4 min Read

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் சில தளர்வுகளுடன், வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவலின் அடிப்படையில் மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள செயல்பாடுகள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

லாக்டவுன்

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, இந்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ வரும்‌ 21- 6- 2021 அன்று காலை 6 மணிக்கு ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும்‌ நிலையில்‌, இந்த ஊரடங்கை ஜூன் 28ம் தேதி காலை 6- 00 மணி வரை, நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


மாவட்டங்களில்‌ உள்ள நோய்த்‌ தொற்று பாதிப்பின்‌ அடிப்படையில்‌, மாவட்டங்கள்‌ பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.


  • வகை 1 - (11 மாவட்டங்கள்‌)

கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, கரூர்‌, நாமக்கல்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள்‌.


  • வகை 2 - (23 மாவட்டங்கள்‌)

அரியலூர்‌, கடலூர்‌, தருமபுரி, திண்டுக்கல்‌, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம்‌, வேலூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்கள்‌.


  • வகை 3 - (சென்னை மற்றும் சில மாவட்டங்கள்)

சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ 3 வது வகையில் இடம்பெற்றுள்ளன.

மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுள்‌, வகை 1-ல்‌ உள்ள 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்‌ மட்டும்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

மேலும்‌, வகை 2-ல்‌ உள்ள 23 மாவட்டங்களில்‌ ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கான நேரத்‌ தளர்வுகளும்‌, கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கும்‌ அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு

வகை 2 மாவட்டங்களுக்கான ஊரடங்கு தளர்வுகள் என்ன?

  • தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள்‌, காய்கறிகள்‌, இறைச்சி மற்றும்‌ மீன்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • காய்கறி, பழம்‌ மற்றும்‌ பூ விற்பனை செய்யும்‌ நடைபாதைக்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • உணவகங்கள்‌ மற்றும்‌ அடுமணைகளில்‌ (hotels, restaurants and bakeries) பார்சல்‌ சேவை மட்டும்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு. இ-காமர்ஸ் மூலம்‌ உணவு விநியோகம்‌ செய்யும்‌ அனைத்து மின்‌ வணிக நிறுவனங்கள்‌. மேற்கண்ட நேரங்களில்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • இதர மின்‌ வணிக சேவை நிறுவனங்கள்‌ (E- Commerce) அனைத்தும்‌ காலை 06.00 மணி முதல்‌ இரவு 09.00 வரை இயங்கலாம்‌.
  • இனிப்பு மற்றும்‌ காரவகை விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 6.00 மணி முதல்‌ இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • அரசின்‌ அனைத்து அத்தியாவசியத்‌ துறைகள்‌ 100% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌. இதர அரசு அலுவலகங்கள்‌, 20% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • சார்‌ பதிவாளர்‌ அலுவலகங்கள்‌ முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்‌.
  • அனைத்து தனியார்‌ நிறுவனங்கள்‌, 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • ஏற்றுமதி நிறுவனங்கள்‌, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள்‌ தயாரித்து வழங்கும்‌ நிறுவனங்கள்‌ 100 சதவிகிதம்‌ பணியாளர்களுடன்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • இதர தொழிற்சாலைகள்‌ 33% பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மின்‌ பொருட்கள்‌, பல்புகள்‌, கேபிள்கள்‌, ஸ்விட்சுகள்‌ மறறும்‌ ஒயர்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மிதிவண்டி மற்றும்‌ இருசக்கர வாகனங்கள்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • ஹார்டுவேர்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • வாகனங்களின்‌ உதிரிபாகங்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • வாகனங்கள்‌ விற்பனை செய்யும்‌ நிறுவனங்கள்‌ மற்றும்‌ விநியோகஸ்தர்களது கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கல்விப்‌ புத்தகங்கள்‌ மற்றும்‌ எழுதுபொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9,00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • வாகன விநியோகஸ்தர்களது வாகன பழுதுபார்க்கும்‌ மையங்கள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • காலணிகள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கண்கண்ணாடி விற்பனை மற்றும்‌ பழுது நீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மிக்சி, கிரைண்டர்‌, தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்‌ பொருட்களின்‌ விற்பனை மற்றும்‌ பழுதுநீக்கும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மண்பாண்டம்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ விற்பனை காலை 9.00 மணி முதல மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • மின்‌ பணியாளர்‌ (Electricians), பிளம்பர்கள்‌ (Plumbers), கணினி மற்றும்‌ இயந்திரங்கள்‌ பழுது நீக்குபவர்‌ (Motor Technicians) மற்றும்‌ தச்சர்‌ போன்ற சுயதொழில்‌ செய்பவர்கள்‌ சேவை கோருபவர்‌ வீடுகளுக்குச்‌ சென்று பழுது நீக்கம்‌ செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ- பதிவுடன்‌ அனுமதிக்கப்படுவர்‌.
  • செல்பேசி மற்றும்‌ அதனைச்‌ சார்ந்த பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌.
  • கட்டுமானப்‌ பொருட்கள்‌ விற்பனை செய்யும்‌ கடைகள்‌ காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்‌. அனைத்து வகையான கட்டுமானப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.
  • பள்ளி, கல்லூரிகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ பயிற்சி நிலையங்களில்‌ மாணவர்‌ சேர்க்கை தொடர்பான நிர்வாகப்‌ பணிகள்‌ அனுமதிக்கப்படும்‌.
  • காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை விளையாட்டு பயிற்சி குழுமங்கள்‌ இயங்கவும்‌, பார்வையாளர்கள்‌ இல்லாமல்‌, திறந்த வெளியில்‌ விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்தவும்‌, அனுமதிக்கப்படும்‌.
  • திரையரங்குகளில்‌, தொடர்புடைய வட்டாட்சியரின்‌ அனுமதி பெற்று வாரத்தில்‌ ஒரு நாள்‌ மட்டும்‌ பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்‌.
  • வாடகை வாகனங்கள்‌, டேக்ஸிகள்‌ மற்றும்‌ ஆட்டோக்களில்‌ பயணிகள்‌ இ-பதிவுடன்‌ செல்ல அனுமதிக்கப்படுவர்‌. மேலும்‌, வாடகை டேக்ஸிகளில்‌, ஒட்டுநர்‌ தவிர மூன்று பயணிகளும்‌, ஆட்டோக்களில்‌, ஒட்டுநர்‌ தவிர இரண்டு பயணிகள்‌ மட்டும்‌ பயணிக்க அனுமதிக்கப்படுவர்‌.
  • வீட்டு வசதி நிறுவனம்‌ (HFCs)) வங்கி சாரா நிதி நிறுவனங்கள்‌ (NBFCs), குறு நிதி நிறுவனங்கள்‌ (MFIs) 33 சதவிகித பணியாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.