குறைந்த செலவில் இ-சைக்கிள்: சென்னையைச் சேர்ந்த பொறியியல் மாணவரின் அசத்தல் சாதனை!
குறைந்த செலவில் இ-சைக்கிளை உருவாக்கி சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
குறைந்த செலவில் இ-சைக்கிளை உருவாக்கி சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
புவி வெப்பமடைதல், கால நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு போன்ற காரணங்களால் உலக நாடுகள் பலவும் மாசில்லாத எனர்ஜியை பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை நிரந்தரமின்மை, விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியன மனிதனை மாற்று எரிசக்தியை தேட உத்துதல் அளித்து வருகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த கவனமும், அக்கறையும் தற்போது இளைஞர்கள் மத்தியிலும் காணப்படுகிறது. குறிப்பாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை தங்களுக்கே உரித்தான வகையில் உருவாக்கி வருகின்றனர். ச
சமீபத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் தனுஷ் குமார் என்ற மாணவர், அரசின் இலவச சைக்கிளை இ-பைக்காக மாற்றி சாதனை படைத்தார்.
ஒருமுறை சார்ஜ் செய்தாலே 40 கி.மீ வரை பயணிக்கும் படியும், பெடல் செய்யும் போதே சார்ஜ் ஆகும் வசதியும் அந்த இ-பைக்கில் இருந்தது பாராட்டுக்களை குவித்தது.
தற்போது சென்னை செயிண்ட் ஜோசப் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படிக்கும் 23 வயது மாணவரான ஆகாஷ் சங்கர், மலிவு விலையிலான இ-சைக்கிளை உருவாக்கியுள்ளார்.
என்ன தான் இ-பைக்குகள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும் அதன் விலை சாமானியர்கள் வாங்கக்கூடியதாக இல்லை. இதைப் பற்றி சிந்தித்த ஆகாஷ், அனைவரும் வாங்கக் கூடிய விலையில் மலிவு விலை இ-சைக்கிளை வடிவமைத்துள்ளார். இதுகுறித்து ஆகாஷ் கூறுகையில்,
“பெட்ரோல் விலையேற்றம் காரணமாக பலர் மோட்டார் பொருத்திய இ-சைக்கிள் பயன்படுத்துவது அதிகரித்துவரும் நிலையில் அதற்கான விலையோ அதிகமாக உள்ளது. ஏனெனில் இ-சைக்கிள்களில் அப் மோட்டார், லித்தியம் பேட்டரி பயன்படுத்துவதாலும் விலை அதிகம் காரணமாக உள்ளதை அறிந்தால் செலவு குறைவாக இ-சைக்கிள் தயாரிக்க பி.எல்.சி.டி மோட்டார் பொருத்தி அதில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க லுவர்ட் பென்ஸ் முறையை பயன் படுத்துவதாகவும், அதுபோல் லித்தியம் பாஸ்பேட் பேட்டரி பயன்படுத்துவதாலும் விலை குறைவது மட்டும் அல்லாமல் தீ விபத்தை தடுக்கும்,” என்றும் தெரிவிக்கிறார்.
இந்த முறையில் இ-சைக்கிள் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ தூரம் வரை செல்ல முடியும். பெடலில் கால் வைத்து லேசாக மிதித்தால் கூடுதலாக 5 மடங்கு தூரம் பயணம் செயயலாம் எனத் தெரிவிக்கும் ஆகாஷ், தற்போது தனது எலெக்ட்ரிக் சைக்கிளுக்கான காப்புரிமையை பெற்றுள்ளார்.
விரைவில் பி.எல்.சி.டி மோட்டார் பொருத்தப்பட்ட எலெக்ட்ரிக் சைக்கிளை 15 ஆயிரம் ரூபாய்கே சந்தைகளில் கிடைக்கும் படி விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதுபோல் 15 ஆண்டுகள் பழைய மற்றும் புகை கக்கும் பைக்குகளை கூட கூடுதல் திறன் கொண்ட மோட்டார் பேட்டரிகளை பயன்படுத்தி இ-பைக்காக மாற்றும் முயற்சியிலும் ஆகாஷ் சங்கர் ஈடுபட்டுள்ளார். மேலும், இதன் மூலம் கைவிடப்பட்ட பழைய பைக்குகளையும் குறைந்த செலவில் இ-பைக்குகளாக மாற்ற முடியும் என அடித்துக்கூறுகிறார்.