சைரஸ் மிஸ்ட்ரி மறு நியமனம்; தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து டாடா நீதிமன்றத்தில் மனு!
டாடா சன்ஸ் கவுரவத் தலைவர் ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்ட்ரிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீடு தீர்ப்பாயம் வாங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
டாடா சன்ஸ் கவுரவ தலைவர் ரத்தன் டாடா, சைரஸ் மிஸ்ட்ரிக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தேசிய கம்பெனி சட்ட மேல் முறையீடு தீர்ப்பாயம் (என்.சி.எல்.ஏ.டி) வாங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த உத்தரவு உறுதி இல்லாமல் இருப்பதாகவும், டாடா சன்ஸ் மற்றும் அதன் பங்குதாரர்கள் மீது பாரபட்சம் கொண்டதாக இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2013ல் சைரஸ் மிஸ்ட்ரி, பொறுப்பேற்றுக் கொள்ளும் வகையில், டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து 2013ல் விலகிய ரத்தன் டாடா, முறையான ஆதாரங்கள் அளிக்காமல், தனக்கெதெரியாக தீர்ப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்றும் மனுவில் கூறியுள்ளார்.
டாடா சஸ்ஸ் தலைவராக சைர்ஸ் மிஸ்ட்ரியை மீண்டும் நியமிக்கும் வகையிலான தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து டாடா சன்ஸ் மனு தாக்கம் செய்த சில நாட்களில் ரத்தன் டாடா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
”தொடர்புடைய தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சரியாகக் கருத்தில் கொள்ளப்படாமல், முறையீடு செய்தவர் மற்றும் பிற பதில் மனுதாரர் சமர்பித்த தகவல்கள் அலட்சியம் செய்யப்பட்டு அல்லது கவனத்தில் கொள்ளப்பட்டது எனில், அவை தீர்ப்பில் கருத்தில் கொள்ளப்படாத வகையில், தீர்ப்பாய உத்தரவு உறுதி அற்று இருப்பதாக, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக,” தெரிகிறது.
பதிவு செய்யப்பட்டவற்றை கவனத்தில் கொள்ளாத வகையில், காரண காரிய ஆய்வு மற்றும் நிதி செயல்முறை புறந்தள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஸ்ரீ தோரப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவை சார்பிலும், தனி மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
”தீர்ப்பாய உத்தரவு, சட்ட நோக்கிலான தீவிர பிழைகள் கொண்டிருப்பதாகவும், எந்தவித அடிப்படைக் காரணங்களும் இல்லாத அல்லது சட்ட நோக்கில் மற்றும் கம்பெனிகள் சட்ட செயல்முறை அடிப்படையில் தவறாக காட்சி அளிக்கும் காரணங்கள் அடிப்படையில் அல்லது தகவல் நோக்கில் சரியில்லாத அனுமானங்கள் அடிப்படையில் பெறப்பட்ட காரணங்கள் அடிப்படையில் விளக்கப்படாத முடிவுகளைக் கொண்டதாக இருப்பதாக,” இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா டிரஸ்ட்ஸ் அறங்காவலர்களில் ஒருவரான வேணு ஸ்ரீனிவாசன் சார்பிலும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறும்பான்மை பங்குதாரர் மீதான ஆதிக்கம் மற்றும் தவறான நிர்வாகம் தொடர்பாக தீர்ப்பாய உத்தரவில் தன் மீது கூறப்பட்டுள்ள புகார்களை ரத்தன் டாடா மறுத்துள்ளார். இந்த உத்தரவு பிழையானது, தவறானது வழக்கு தொடர்பான ஆவணங்களுக்கு முறையானது,” என அவர் கூறியுள்ளார்.
தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ரத்தன் டாடா தனது மனுவில் கோரியுள்ளார்.
”மேதகு நீதிமன்றம் இதை ரத்து செய்யவில்லை எனில், டாடா சன்ஸ் செயல்பாட்டில் குழப்பத்தை உண்டாக்கி, பங்குதாரர்கள் இறையாண்மையை பாதித்து, நிர்வாகத்தை சீர்குலைக்கும்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்ட்ரி, திட்டமிட்டு அனைத்து டாடா முன்னணி நிறுவனங்களின் அதிகாரத்தையும் தன்னிடம் குவித்துக் கொண்டதாகவும் ரத்தன் டாடா மனுவில் கூறியுள்ளார்.
ஜப்பானிய நிறுவனம் டோகோமோ தொடர்பான விவகாரம், மிஸ்ட்ரியின் நிர்வாகத் திறன் இல்லாத தன்மைக்கு உதாரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மிஸ்ட்ரி பதவி காலத்தின் போது தான், தொழில்நுட்பக் காரணங்கள் காட்டி, டோகோமோ உடனான ஒப்பந்த அம்சங்களை டாடா சன்ஸ் நிறைவேற்றாமல் போனது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமரச வழக்கில் பாதகமான தீர்ப்பு வந்த நிலையிலும் கூட மிஸ்ட்ரி, சட்டப்படி நடந்து கொள்வதை மேற்கொண்டு தவிர்க்கப் பார்த்தார் என்றும், இது டாடா பிராண்ட் கடைப்பிடிக்கும் விழுமியங்களுக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டோகோமோ உடனான பிரச்சனை டாடா சன்ஸ் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்